

சென்னை: சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்ட இளைஞர் ஒருவர், போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியந்தோப்பு தட்டாங் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் இமானுக்கு (20) சிறு வயதில் இருந்தே சர்க்கரை நோய் இருப்பதாகவும், இதனால் அவர் தினமும் இன்சு லின் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புளியந் தோப்பு மாதா கோயில் விளை யாட்டு மைதானம் அருகே. இமான் மயங்கிக் கிடப்பதாக அவரது நண்பர்கள், பெற் றோருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இமானின் பெற்றோர், மயங்கிக் கிடந்த இமானை மீட்டு சிகிச் சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இமானை பரிசோதித்த மருத்துவர்கள்,
அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ மனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் புளியந் தோப்பு போலீஸார் இமானின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இமான், இன்சுலின் ஊசி பயன்படுத்தி வந்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து அதனுடன் போதை மருந்தும் செலுத்தி வந்ததுள்ளார். அதன் தொடர்ச்சியாக தன் நண்பர் கைமா ராஜேஷுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இமான் போதை ஊசி செலுத்தி கொண்டதும், அதன்பின் அவர் மயங்கியதும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர் போதை ஊசி செலுத்தியதால் உயிரிழந்தாரா ? அல்லது இன்சுலின் செலுத்தியதால் உயிரிழந்தாரா ? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.