சென்னை | பெண் தூய்மை பணியாளரை தாக்கிய இளைஞர் கைது

சென்னை | பெண் தூய்மை பணியாளரை தாக்கிய இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: கொருக்​குப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் லட்​சுமி (43). சென்னை மாநக​ராட்​சி​யில் ஒப்​பந்த அடிப்​படை​யில் தூய்​மைப் பணி​யாள​ராக பணி செய்து வரு​கிறார்.

இவர் நேற்று முன்​தினம் அதி​காலை எழும்​பூரில் தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார்.

அப்​போது, அந்த வழி​யாக சென்று கொண்​டிருந்த இளைஞர் ஒரு​வரை லட்​சுமி ஓரமாக போகச் சொன்​னா​ராம்.

அதற்கு அந்த இளைஞர் இந்​தி​யில் தகாத வார்த்​தை​யால் திட்​டி, தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது.

உடனே லட்​சுமி சத்​தம் போடவே அந்த இளைஞர் அங்கிருந்து தப்​பிச் சென்​றுள்​ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி லட்சுமியை தாக்கிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ரவீந்​தர் சிங் (25) என்​பவரை கைது செய்தனர்.

சென்னை | பெண் தூய்மை பணியாளரை தாக்கிய இளைஞர் கைது
கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டம்: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in