நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட இளைஞருக்கு வலை

நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட இளைஞருக்கு வலை
Updated on
1 min read

சென்னை: நீ​தி​மன்​றத்​தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்ட இளைஞரை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வரு​கின்​றனர். பல்​வேறு குற்ற வழக்கு விவகாரம் தொடர்​பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதி​மன்றத்தில் வழக்குகளில் விசா​ரணை நடை பெற்று வருகிறது.

வழக்கு விசா​ரணை​யில் ஆஜராக இளைஞர் ஒரு​வர் நீதி​மன்​றத்​துக்கு வந்​தார். அவர், வழக்​கில் ஆஜராகி​விட்​டு, வெளியே வந்து கானா பாடல் பாடி அதை வீடியோ​வாக சமூக வலை​தளங்​களில் பதி​விட்​டார்.

இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதுகுறித்​து, சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. உரிய விசா​ரணை நடத்த போலீ​ஸாருக்கு ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார்.

அதன்​படி, சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரித்து வரு​கின்​றனர். முதல்​கட்​ட​மாக வீடியோ பதி​விட்ட இளைஞரை அடை​யாளம் கண்டு கைது செய்​யும் பணி முடுக்​கி விடப்​பட்​டுள்​ளது.

நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட இளைஞருக்கு வலை
நொளம்பூரில் 75 வயது மூதாட்டியை கொலை செய்தவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in