நொளம்பூரில் 75 வயது மூதாட்டியை கொலை செய்தவர் கைது

நொளம்பூரில் 75 வயது மூதாட்டியை கொலை செய்தவர் கைது
Updated on
1 min read

சென்னை: நொளம்​பூரில் 75 வயது மூதாட்டி கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். தங்க நகை என நினைத்து கவரிங் நகையை பறித்து தப்ப முயன்​றவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

சென்னை நொளம்​பூர், சித்​தார்த் நகர், வெள்​ளாளர் தெரு​வில் வசித்து வந்​தவர் மேரி (75). இவருக்கு 2 மகன்​கள். அவர்​கள் திரு​மண​மாகி வெவ்​வேறு பகு​தி​களில் வசிக்​கின்​றனர்.

மேரி மட்​டும் கடந்த 3 ஆண்​டு​களாக தனி​யாக வசித்து வந்​தார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு அவரது வீட்​டுக்​குள் நுழைந்த ஒரு​வர், மேரியை தாக்கி கொலை செய்​து​விட்​டு, அவரது செயின் மற்​றும் கம்​மலை பறித்து தப்ப முயன்​றார்.

தாக்​குதலில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி, வலி தாங்க முடி​யாமல் கூச்​சலிட்​டார். அவரது அலறல் சத்​தம் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் திரண்​டனர். அப்​போது அங்​கிருந்து கொலை​யாளி தப்​பிக்க முயன்​றார். அவரை பொது​மக்​கள் மடக்​கிப் பிடித்து நொளம்​பூர் போலீ​ஸில் ஒப்​படைத்​தனர்.

போலீ​ஸார் மூதாட்டியை ஆம்​புலன்ஸ் மூலம் சிகிச்​சைக்​காக அனுப்பி வைக்க முயன்​றனர். அதிலிருந்த செவிலியர்​கள் பரிசோ​தித்​த​தில் மேரி ஏற்​கெனவே இறந்​திருந்​தது தெரிந்​தது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

பின்​னர் கொலையாளியை கைது செய்து அவரது பாக்​கெட்​டில் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த மேரி​யின் செயின், கம்​மலை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். விசா​ரணை​யில் பிடிபட்​டது அதே பகு​தி​யைச் சேர்ந்த காராமணி என்ற ஏழு​மலை (72) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை போலீ​ஸார் சிறை​யில் அடைத்​தனர்.

“மூதாட்டி தனிமை​யில் வசித்து வரு​வதை அறிந்து அவர் அணிந்​திருந்த நகையை பறிக்க திட்​டம் தீட்டி அவர் வீட்​டுக்கு சென்​றேன். அப்​போது அவர் தூங்​கிக் கொண்​டிருந்​தார். அவர் அணிந்​திருந்த செயின், கம்​மலை கழற்ற முயன்​ற​போது அவர் கூச்​சலிட்​டார். அவரை தடுக்​கும் வகை​யில் அரு​கில் கிடந்த கல்லை எடுத்து தலை​யில் பலமாக தாக்​கினேன்.

அதில் அவர் மயங்​கி​னார். பின்​னர் மேரி அணிந்​திருந்த செயின், கம்​பலை கழற்றி எடுத்​துக் கொண்டு தப்ப தயா​ரானேன். அதற்​குள் அக்​கம்​பக்​கத்து வீட்​டினர் திரண்டு என்னை பிடித்​து​விட்​டனர்” என கைது செய்​யப்​பட்ட ஏழு​மலை முன்​ன​தாக வாக்​குமூல​ம் அளித்ததாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் கொலை செய்​யப்​பட்ட மூதாட்டி அணிந்​திருந்த நகைகள் அனைத்​தும் கவரிங் நகைகள் என தெரிய​வந்​துள்​ளது.

நொளம்பூரில் 75 வயது மூதாட்டியை கொலை செய்தவர் கைது
ஆசிர்வாதம் செய்வதாக ஏமாற்றி வடமாநில இளைஞரிடம் வழிப்பறி: திருநங்கைகள் 4 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in