5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 5 மரண தண்டனை விதிப்பு

சந்திரன்

சந்திரன்

Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் சிங்​கம்​புணரி அருகே 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலா​ளிக்கு 5 மரண தண்​டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

சிங்​கம்​புணரி அருகே மரு​திபட்​டியைச் சேர்ந்த விறகு வெட்​டும் தொழிலாளி சந்​திரன் (49). இவருக்கு திரு​மண​மாகி ஒரு மகன், ஒரு மகள் உள்​ளனர். இவர், 2023-ம் ஆண்​டிலிருந்து 5 சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

இதுகுறித்து ஒரு சிறுமி​யின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருப்​பத்​தூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சந்​திரனை 2024 பிப்​ர​வரி 13-ம் தேதி கைது செய்​தனர். பின்​னர், அவரை குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் கைது செய்து மதுரை மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

இதுதொடர்​பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் தனலெட்​சுமி ஆஜராகி வாதாடி​னார். குற்​றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்​ சந்​திரனுக்கு மரண தண்​டனை விதித்து நீதிபதிகோகுல்முருகன் நேற்று தீர்ப்​பளித்​தார்.

அந்தத் தீர்ப்​பில் நீதிபதி கூறி​யிருப்​ப​தாவது: குற்​றம்​சாட்​டப்​பட்ட சந்​திரன், ‘வீடியோ கேம்​களை’ காண்​பித்​தும், தின்பண்​டங்​கள் வாங்கிக் கொடுத்​தும், செல​வுக்கு ரூ.20 கொடுத்​தும் சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

அரி​தி​லும் அரி​தான இந்த வழக்​கில் புகார் அளித்த சிறுமி​யின் தந்தை மற்​றும் நீதி​மன்​றத்​தில் தைரிய​மாக உண்​மையைக் கூறிய பாதிக்​கப்​பட்ட 5 சிறுமிகளை பாராட்​டு​கிறேன்.

குற்​றம் ​சாட்​டப்​பட்ட சந்​திரனுக்​கு, சிறுமிகளை மிரட்​டிய குற்​றத்​துக்கு 2 ஆண்​டு​கள் சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம், ஒருசிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்கு 20 ஆண்​டு​கள் சிறை, மற்ற 4 சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்கு தனித்​தனி​யாக சாகும் வரை 4 ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது.

மேலும் 12 வயதுக்​குட்​பட்ட சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்​காக 5 மரண தண்​டனை விதிக்​கப்​படு​கிறது. பாதிக்​கப்​பட்ட 5 சிறுமிகளுக்​கும் தலா ரூ.7 லட்​சம் இழப்​பீ​டாக தமிழக அரசு வழங்க வேண்​டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

தீர்ப்பு அளித்​து முடித்தவுடன் தீர்ப்பு எழுதிய பேனா முனையை உடைத்து வீசி யெறிந்தார். சிவகங்கை போக்சோ நீதி​மன்​றத்​தில் ஒரு வழக்கில் மரண தண்​டனை வி​திக்​கப்​படு​வது இது​வே முதல்​முறை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>சந்திரன்</p></div>
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கலாம்: போக்குவரத்துத் துறை முன்னாள் செயலர் பணிந்திர ரெட்டி கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in