புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நீதி கேட்டு நேற்று நடந்த மறியல்.

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நீதி கேட்டு நேற்று நடந்த மறியல்.

Updated on
1 min read

புதுக்கோட்டை: கறம்​பக்​குடி அருகே மாற்​றுத் திற​னாளி பெண்ணை காரில் கடத்​திச்சென்று கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில் தலைமறைவாக இருந்தவரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

புதுக்​கோட்டை மாவட்​டம்​ கறம்​பக்​குடி பகு​தி​யைச் சேர்ந்த 35 வயதான வாய் பேச முடி​யாத மற்​றும் காது கேளாத மாற்​றுத் திற​னாளி பெண், ஒரு அரிசி ஆலை​யில் தினக்​கூலி​யாக வேலை செய்து வரு​கிறார். இவர் 2 நாட்​களுக்கு முன்பு பணி முடிந்து வீட்​டுக்​குச் செல்ல பேருந்து நிறுத்​தத்​தில் காத்​திருந்​தார்.

அப்​போது, அவ்​வழி​யாக காரில் சென்ற கறம்​பக்​குடி மணக்​கொல்​லை​யைச் சேர்ந்த ஏ.சேகர் (56), மாரி​முத்து (55) ஆகியோர் அவரை காரில் வீட்​டுக்​குக் கொண்டு சென்று விடு​வ​தாகக் கூறியுள்​ளனர்.

அந்​தப்பெண் மறுத்த நிலை​யில், அவரை கட்​டாயப்​படுத்தி காரில் ஏற்​றி கண்​மாய் பகு​திக்கு கடத்​திச் சென்று பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.போராடிய அந்​தப் பெண்ணை தாக்​கி​யுள்​ளனர். பின்​னர், காரில் சிறிது தொலைவு அழைத்​துச் சென்று இறக்​கி​விட்​டு​ தப்​பி​னர். அப்​பெண் கூச்​சலிட்​டதை கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் சென்று விசா​ரித்​து, மழையூர் போலீ​ஸாருக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்​து, அவர் புதுக்​கோட்டை ராணி​யார் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் தொடர்​பாக, ஆலங்​குடி அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து மாரி​முத்​துவை கைது செய்​தனர். நீதிகேட்டு மழையூரில் மக்​கள் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் வைத்து சேகரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இழப்​பீடு வழங்க வேண்​டும்

இதனிடையே இந்தச் சம்​பவத்​துக்கு தலை​வர்​கள் கண்​டனம் தெரிவித்​துள்​ளனர்.

திமுக துணை பொதுச்​செய​லா​ளர்கனி​மொழி: மாற்​றுத் திற​னாளி பெண்ணை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அளிக்​கிறது. மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வோம் என்று வாக்​குறு​தி​யளித்து ஆட்​சிக்கு வந்​திருக்​கும் தவெக அரசு, தொடரும் இது​போன்ற சம்​பவங்​களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இது மன்​னிக்க முடி​யாத குற்​ற​மாகும். திமுக ஆட்சி அகற்​றப்​பட்ட பிறகும் அத்​தகைய குற்​றங்​கள் தொடர்​வது கவலை​யளிக்​கிறது. இதில் சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: இச்​சம்​பவம் வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இந்த குற்​றச்​செயலில் தொடர்​புடைய அனை​வரும் கைது செய்​யப்​பட்​டு, தண்​டிக்​கப்பட வேண்​டும். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு அரசு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும்​.

<div class="paragraphs"><p>மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நீதி கேட்டு நேற்று நடந்த மறியல்.</p></div>
மின்சாரம் தாக்கியதில் தம்பதி உள்ளிட்ட 3 பேர் ஆத்தூரில் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in