கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: பெண் கைது

கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: பெண் கைது
Updated on
1 min read

சென்னை: ​அசோக் நகரைச் சேர்ந்​த ஆண்​டனி அமிர்​த ​ராஜ் (51) என்பவருக்கு 2 ஆண்​டு​களுக்கு முன்பு தொண்டு நிறு​வனம் நடத்​திவரும் சின்​னத்​துரை என்​பவரது அறி​முகம் கிடைத்​துள்​ளது. அவர் மூலம் ராணிப்​பேட்டை மாவட்​டம், ஆற்​காட்​டைச் சேர்ந்த லட்​சுமி பிரியா (45) என்​பவர் அறி​முக​மா​னார்.

இவர்கள் முக்கிய பிரமுகர்களைத் தெரியும் எனக் கூறியதை நம்​பிய அமிர்​த​ராஜ், தனது மகனுக்கு கால்​நடை மருத்​து​வக் கல்லூரியில் சீட்டு வாங்​கித் தருமாறு கேட்டு சின்​னத்​துரை, பிரியா மற்​றும் அவர்​களது கூட்​டாளி​களுக்கு 3 தவணை​களாக ரூ.42 லட்​சம் அனுப்பியுள்ளார்.

ஆனால், உறு​தி​யளித்​த​படி கால்​நடை மருத்​து​வக் கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்​காமல் ஏமாற்​றி​யுள்​ளனர். தொடர்ந்து வலி​யுறுத்​தி​யதை அடுத்து ரூ.4 லட்​சத்தை மட்​டும் திருப்​பிக் கொடுத்​துள்​ளனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸில் அமிர்​த​ராஜ் புகார் அளித்​தார்.

போலீ​ஸ் விசா​ரணையில் புகார் உண்​மையென தெரிய​வந்​ததையடுத்​து, லட்​சுமி பிரி​யாவை கைது செய்​தனர். மீத​முள்ள அவர்​களது கூட்​டாளி​கள் 4 பேரை தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். லட்​சுமி பிரி​யா, தனி​யார் பள்ளி ஒன்​றில் முன்பு ஆசிரியை​யாக பணி செய்து வந்​துள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: பெண் கைது
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: அசாம் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in