சென்னை | கதவை திறந்து வைத்து தூங்கிய மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: உ.பி. இளைஞர் கைது

சென்னை | கதவை திறந்து வைத்து தூங்கிய மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: உ.பி. இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: காற்​றுக்​காக கதவைத் திறந்து தூங்​கிய மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்​தரப் பிரதேச மாநில இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை அயனாவரம் பகு​தி​யைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒரு​வர், தனது கணவருடன் வசித்து வரு​கிறார். இவர், நேற்று முன்​தினம் இரவு வழக்​கம் போல் வீட்​டில் தூங்​கி​னார். கோடை வெயில் புழுக்​கம் காரண​மாக, வீட்​டின் முன் கதவை லேசாகத் திறந்து வைத்​திருந்​தார்.

இதனை நோட்​ட​மிட்ட பக்​கத்து வீட்​டைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர், நள்​ளிர​வில் மூதாட்​டி​யின் வீட்​டுக்​குள் புகுந்து அங்கு அயர்ந்து தூங்​கிக் கொண்​டிருந்த மூதாட்​டி​யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்​றுள்​ளார். சட்​டென கண் விழித்த மூதாட்டி அதிர்ச்​சி​யில் கூச்​சலிட்​டார்.

அலறல் சத்​தம் கேட்டு அவரது கணவரும், அக்​கம் பக்​கத்​தினரும் ஓடி வந்​து, அந்த இளைஞரை மடக்​கிப் பிடித்​தனர். தொடர்ந்து அவருக்கு பொது​மக்​கள் தர்​ம அடி கொடுத்​ததோடு, இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​துக்​கும் தகவல் தெரி​வித்​தனர்.

போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து வந்து பொது​மக்​களிடம் சிக்​கிய இளைஞரை மீட்டு காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

இதில், பிடிபட்ட நபர் உத்​தரப் பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த யோகேஷ் (30) என்​பதும், அவர் கடந்த ஒரு மாதத்​துக்கு முன்​பு​தான் மூதாட்​டி​யின் வீட்​டின் அருகே குடிவந்​தார் என்​பதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை | கதவை திறந்து வைத்து தூங்கிய மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: உ.பி. இளைஞர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in