ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

முதலீட்டாளர்களிடம் ரூ.2.37 கோடி மோசடி வழக்கு
சந்திரசேகரன், சோமசுந்தரம்

சந்திரசேகரன், சோமசுந்தரம்

Updated on
1 min read

கோவை: கோவை​யில் ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.2.37 கோடி மோசடி செய்த இரு​வருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்​டனை விதித்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

நாமக்​கல் மாவட்​டம் திருச்​செங்​கோட்​டில் உள்ள பெரியமணலி பகு​தி​யில் கடந்த 2012-ம் ஆண்டு ஈமுக்​கோழி பண்​ணையை சந்​திரசேகரன்​(48), சோமசுந்​தரம்​(55) ஆகியோர் நடத்தி வந்​தனர். வாடிக்​கை​யாளர்​களை கவர இவர்​கள் அறி​வித்த கவர்ச்சி திட்​டங்​களை நம்​பி, நூற்​றுக்​கணக்​கான மக்​கள் லட்​சக்​கணக்​கில் பணம் செலுத்​தினர். ஆனால், அறி​வித்​த​படி முதலீட்​டாளர்​களுக்கு லாப தொகையை கொடுக்​க​வில்​லை. முதலீடு செய்த பணத்​தை​யும் திரும்ப தரவில்​லை.

இதனால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நாமக்​கல் மாவட்ட பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், மொத்​தம் 115 பேரிடம் ரூ.2 கோடியே 37 லட்​சத்து 98 ஆயிரம் வசூலித்து மோசடி செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, பண்ணை உரிமை​யாளர்​கள் சந்​திரசேகரன், சோமசுந்​தரம், காசாளர் அமு​தா, பங்​கு​தா​ரர்​கள் ராமகிருஷ்ணன், ஆனந்​தன் ஆகியோர் மீது மோசடி உள்​ளிட்ட பிரிவு​களில் போலீ​ஸார் வழக்​குப்​ ப​திந்​தனர்.

கோவை டான்​பிட் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்த இந்த வழக்​கில், நேற்று முன்​தினம் நீதிபதி செந்​தில்​ கு​மார் தீர்ப்​பளித்​தார். அதில், குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட்​ட​தால் சந்​திரசேகரன், சோமசுந்​தரம் ஆகியோ​ருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.1 கோடியே 3 லட்​சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்​தர​விட்​டார். மற்ற மூவரும் விடுவிக்​கப்​பட்​டனர்.

<div class="paragraphs"><p>சந்திரசேகரன்,&nbsp;சோமசுந்தரம் </p></div>
ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in