பெண் விஏஓ உயிரிழப்பு வழக்கில் திருப்பம்: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்

பெண் விஏஓ உயிரிழப்பு வழக்கில் திருப்பம்: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்
Updated on
1 min read

பொன்னேரி: பொன்​னேரி அருகே பெண் விஏஓ தற்கொலை செய்து கொண்​ட​தாக கூறப்​பட்ட நிலை​யில், மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாகக் கூறி சக விஏஓ காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த அருணா (27), பொன்​னேரி வட்​டத்​துக்கு உட்​பட்ட கீரப்​பாக்​கம் கிராம நிர்​வாக அலு​வல​ராக பணிபுரிந்து வந்​தார்.

வீட்டு வேலை செய்​ய​வில்லை என தாயார் ஜோதி கண்​டித்​த​தால், கடந்த 29-ம் தேதி அருணா விஷம் அருந்​தி​ய​தாக கூறி, பெற்​றோர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் அருணா உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக திருப்​பாலை​வனம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த வழக்​கில் திடீர் திருப்​ப​மாக அருணாவுடன் பணி​யாற்றி வந்த சக விஏஓ சிவ​பாரதி என்​பவர், அருணா மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக திருப்​பாலை​வனம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.

அந்த புகார் மனு​வில், “பொன்​னேரி வட்​டத்​தில் கிராம நிர்​வாக அலு​வலர்​களாக கடந்த 2 ஆண்​டு​களாக பணிபுரிந்து வந்த நானும், அருணா​வும் நண்​பர்​களாக பழகி, பின்​னர் காதலித்​தோம். இரு​வரும் திரு​மணம் செய்து கொள்ள முடிவு செய்​தோம். இதற்கு எனது பெற்​றோர் சம்​மதம் தெரி​வித்​தனர்.

ஆனால், அருணா​வின் பெற்​றோர், இரு​வரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்​தவர்​கள் என்​ப​தால், காதலை ஏற்​க​வில்​லை. அருணாவை மிரட்​டிள்​ளனர். எனக்​கும், எனது குடும்​பத்​தினருக்​கும் மிரட்​டல் விடுத்​தனர். இதற்​கிடை​யில், அருணா உயி​ரிழந்​திருப்​பது சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

பெண் விஏஓ உயிரிழப்பு வழக்கில் திருப்பம்: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்
ராகமாலிகை ஸ்வர மழை பொழிந்த குருசரண் | சென்னை இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in