ராகமாலிகை ஸ்வர மழை பொழிந்த குருசரண் | சென்னை இசை அரங்கம்

ராகமாலிகை ஸ்வர மழை பொழிந்த குருசரண் | சென்னை இசை அரங்கம்

Published on

சென்னை: மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா இனிதே நிறைவு பெற்​றது. இசை​விழா​வின் ஒரு பகுதியாக வித்​வான் சிக்​கில் குருசரணின் கச்​சேரி நடை​பெற்​றது. அவருக்கு பக்​கபல​மாக வி.சஞ்​சீவ் (வயலின்), டெல்லி எஸ்​.​சாய்​ராம் (மிருதங்​கம்), ஹெச்​.பிரசன்னா (கடம்) இருந்​தனர்.

“ஸரஸிஜாக் ஷ நின்னே கோரி’ எனத் தொடங்​கும் ருத்​ரபட்​ட​ணம் வெங்​கடரமணய்​யா​வின் நாயகி ராக வர்​ணத்​துடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் சிக்​கல் குருசரண்.

அடுத்​ததாக ‘நாயக​னாய் நின்ற நந்​தகோபனுடைய’ எனத் தொடங்​கும் ஆண்​டாள் திருப்​பாவையை கமாஸ் ராகத்​தில் விருத்​த​மாகப் பாடி​விட்​டு, முத்​துசு​வாமி திட்​சிதரின் ‘ சந்​தான கோபால​கிருஷ்ணம் உபாஸ்​மஹே’ எனத் தொடங்​கும் க்ரு​தி​யைப் பாடி​னார். ‘ ருக்​மிணி சத்​ய​பாமா சமேதம்’ என்ற வரி​யில் நிர​வல் செய்​ததும் கச்​சேரி சூடு பிடிக்​கத் தொடங்​கியது.

இந்த க்ரு​தி​யில் முத்​துசு​வாமி தீட்​சிதர் குழந்தை வடிவி​லான கண்​ணனை வர்​ணிக்​கிறார். குழல் ஊதி, மாடு​களு​டன் விளை​யாடு​பவன், சுகர், நாரதர், சனகாதி முனிவர்​களால் வணங்​கப்​படு​பவன், நீல மேக சியாமளன், அர்​ஜுனனுக்கு பிரிய​மானவன், தனது தாமரைக் கரங்​களால் அனை​வருக்​கும் செல்​வம் அருள்​பவன் என்று கண்​ணன் போற்​றப்​படு​கிறான்.

அடுத்​த​தாக முத்​துசு​வாமி தீட்​சிதரின் உதய ரவிச்​சந்​திரிகா (சுத்த தன்​யாசி) ராகத்​தில் அமைந்த க்ரு​தியை ( குரு​குஹ மூர்த்தே சிச்​சக்தி ஸ்பூர்த்​தே) பாடி​னார். ‘ஆத்​மோதய ரவிச்​சந்​திரி​கா’ என்ற வரியைத் தேர்ந்​தெடுத்து அதற்கு ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். பிர​தான ராகத்​துக்கு செல்​வதற்கு முன்பு பூச்சி நி​வாஸ அய்​யங்​காரின் சாரங்கா ராக க்ரு​தியை (ராமா நின்னே நம்​மி​தினி) பாடி​னார்.

பிர​தான ராக​மாக பைரவி அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு தியாக​ராஜ சுவாமி​யின் ‘கொலு​வை​யுன்​னாடே கோதண்​ட​பாணி’ எனத் தொடங்​கும் கீர்த்​தனையைப் பாடி​னார். பல்​லவி வரி​யில் நிர​வல் செய்​து, பின்​னர் ‘மனசு ரஞ்​சில்ல சூரசட்​டுலு’ என்ற வரிக்கு ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். தனி ஆவர்த்​தனத்​தில் சாய்​ரா​மும் பிரசன்​னா​வும் தங்​கள் கோர்​வை​களால் கச்​சேரிக்கு அழகு சேர்த்​தனர்.

ராகம் தானம் பல்​லவிக்கு பாவனி ராகத்தை தேர்ந்​தெடுத்தார் குருசரண். ‘பாலின்சு காமாட்சி பாவனி துரி​தாபஹாரிணி அம்ப’ என்ற பல்​ல​வியை கண்ட ஜாதி திரிபுட தாளத்தில் (2 களை) த்ரி​காலங்​களில் பாடி​னார். ராக​மாலிகை ஸ்வரங்​கள், பவானி, மோகன கல்​யாணி, அம்​ருத​வாஹினி ராகங்​களில் அமைந்​தன.

தொடக்​கம் முதலே பாடகருக்கு அனுசரணை​யாக வயலின் வாசித்து வந்த சஞ்​சீவ், பிர​தான ராகம், ராக​மாலிகை ஸ்வரங்​களில் தனது தனித்​து​வத்தை வெளிப்​படுத்​தி​னார். கிருஷ்ண பஜன், லால்​குடி ஜி.ஜெய​ராமனின் ராகே ராகத் தில்​லானா (ஈவேள நன்னு காவுனு) ஆகிய​வற்​றுடன் கச்​சேரியை நிறைவு செய்​தார் சிக்​கில் குருசரண்.

இசைக் குடும்​பத்​தில் பிறந்த சிக்​கில் குருசரண், வித்​வான் வைக்​கல் ஞானஸ்​ கந்​தன், வித்​வான் பி.கிருஷ்ண​மூர்த்தி ஆகியோரிடம் இசை பயின்​றார்​. தற்​போது, இந்​தி​யா மட்​டுமின்​றி வெளி​நாடு​களி​லும்​ கச்​சேரி செய்​து வருகிறார்​. மியூசிக் அகாட​மி, இசைக் கச்​சேரி​கள் மட்​டுமின்​றி, 1930-களில் இருந்​து, நடனத்​துக்​கும் அதிக முக்​கி​யத்​து​வம் கொடுத்​து, அது தொடர்​பான கருந்​தரங்​கு​களை​யும் நடத்தி வரு​கிறது.

இந்த நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக உலகம் முழு​வதும் இருந்து நடனக் கலைஞர்​கள், ரசிகர்​கள் டிசம்​பர், ஜனவரி​யில் சென்னை வரு​வது வழக்​கம். மியூசிக் அகாட​மி​யின் நாட்​டிய விழா ஜன. 3-ம் தேதி (இன்​று) மாலை தொடங்​கு​கிறது.

ராகமாலிகை ஸ்வர மழை பொழிந்த குருசரண் | சென்னை இசை அரங்கம்
பேகடா ராக பல்லவியில் ஒளிர்ந்த அனிருத் | சென்னை இசை அரங்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in