ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய தவெகவினர் கைது

ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய தவெகவினர் கைது
Updated on
1 min read

சென்னை: புது​வண்​ணாரப்​பேட்​டை, வீர​ராகவன் தெரு​வில் உள்ள ரேஷன் கடை​யில் நேற்று முன்​தினம் வழக்​கம்​போல செயல்பட்டுக் கொண்​டிருந்​தது. அப்​போது அங்கு மது​போதை​யில் இரு​வர் வந்​தனர்.

அவர்​கள் எடை​யாளர் டேனியல் (30) என்பவரிடம் சென்​று, “அட்​டை​தா​ரர்​களுக்கு ரேஷன் பொருட்​களை சரி​யான அளவில் வழங்​காமல், அதைத்திருடி கள்​ளச்​சந்​தை​யில் விற்​பனை செய்​கிறீர்​களா” எனக் கேட்​டு, தகராறில் ஈடு​பட்டு தாக்​கினர்.

பில் போட்​டுக் கொண்​டிருந்த எழுத்​தர் கலை​யரசன் (33) அவர்​களைத் தடுக்க முயன்​றார். அவரை​யும் அரு​கில் கிடந்த உருட்​டுக்​கட்டை மற்​றும் நாற்​காலி​யால் போதை ஆசாமிகள் தாக்​கி​யுள்​ளனர்.

இதில் ரேஷன் கடை ஊழியர்​கள் இரு​வரும் காயம் அடைந்​தனர். தகவல் அறிந்த ரேஷன் கடை கண்​காணிப்​பாளர் அம்​பி​காபதி போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தார்.

புது​வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் விரைந்து சென்று காயம் அடைந்த ரேஷன் கடை ஊழியர்​கள் இரு​வரை​யும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

பின்​னர் வழக்​குப் பதிந்து தலைமறை​வான புது​வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் (33), அதே பகு​தி​யைச் சேர்ந்த விஜய் (27) ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். இவர்​கள் இரு​வரும் தவெக உறுப்​பினர் என கூறப்​படு​கிறது. அது குறித்​தும் போலீ​ஸார் வி​சா​ரிக் ​கின்​றனர்​.

ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய தவெகவினர் கைது
சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகத்துடன் நுழைவு வாயில்கள்: ரூ.269 கோடியில் ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in