லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவின் முதல் நடவடிக்கை

லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவின் முதல் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: லஞ்சம் கேட்ட போக்​கு​வரத்து எஸ்.ஐ. ஆயுதப்​படைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். இது சென்னை காவல் ஊழல் ஒழிப்பு தனிப்​பிரி​வின் முதல் நடவடிக்​கை​யாக ஆகும்.

சென்னை காவல்​துறை​யில் பணி​யாற்​றும் போலீ​ஸார் லஞ்​சம் கேட்​பது குறித்து பொது​மக்​கள் நேரடி​யாக புகார் அளிக்​கும் வகை​யில், காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின் பேரில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்​பிரிவு’ கடந்த வாரம் தொடங்​கப்​பட்​டது.

இதற்​காக 7871723000 என்ற தனிப்​பிரிவு வாட்​ஸ்​அப் எண்​ணும் அறிவிக்​கப்​பட்​டது. இந்த எண்​ணில் போலீ​சார் லஞ்​சம் கேட்​பது தொடர்​பாக பொது​மக்​கள் புகார் மற்​றும் ஆதா​ரங்​களை அனுப்​பலாம் என்​றும், புகார் அளிப்​பவர்​களின் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​றும் காவல் ஆணை​யர் தெரி​வித்​திருந்​தார். புதிய முயற்​சிக்கு பொது​மக்​கள் மத்​தி​யில் வரவேற்பு கிடைத்​தது.

ஊழல் ஒழிப்பு தனிப்​பிரிவு தொடங்​கப்​பட்​டதைத் தொடர்ந்து காவல் துறை அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அமல்​ராஜ் முக்​கிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யிருந்​தார்.

“எந்​த வொரு சூழலிலும் நான் லஞ்​சம் வாங்க மாட்​டேன். அதே​போல் காவல் துறை​யில் யார் லஞ்​சம் வாங்​கி​னாலும் அவர்​களை தப்ப விட​மாட்​டேன்” என்று அவர் எச்​சரித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், புதிய தனிப்​பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்​படை​யில் போக்​கு​வரத்து போலீஸ் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. சிந்​தா​திரிப்​பேட்டை பகு​தி​யில் சாலை​யோரம் போக்​கு​வரத்​துக்கு இடையூறாக நிறுத்​தப்​பட்​டிருந்த வாக​னம் ஒன்றை போக்​கு​வரத்து போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

அந்த வாக​னத்தை மீண்​டும் விடு​விப்​ப​தற்​காக எஸ்ஐ செல்​வ​ராஜ், வாகன உரிமை​யாளரிடம் ரூ.500 லஞ்​சம் கேட்​டுள்​ளார். இதையடுத்து வாகன உரிமை​யாளர் சென்னை காவல்​துறை​யின் ஊழல் ஒழிப்பு தனிப்​பிரிவு வாட்​ஸ்​அப் எண்​ணில் புகார் அளித்​தார்.

புகாரைத் தொடர்ந்து போலீஸ் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். இதில், வாக​னத்தை விடு​விப்​ப​தற்​காக ரூ.500 லஞ்​சம் கேட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, எஸ்ஐ செல்​வ​ராஜை ஆயுதப்​படைக்கு மாற்றி காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார்.

புதி​ய​தாக தொடங்​கப்​பட்ட ஊழல் ஒழிப்பு தனிப்​பிரிவுக்கு கிடைத்த முதல் புகாரிலேயே போலீஸ் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டிருப்​பது, லஞ்​சப் புகார்​களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்ற காவல்​துறை​யின்​ நிலைப்​பாட்​டை வெளிப்​படுத்​து​வ​தாக அமைந்​துள்​ளது.

லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவின் முதல் நடவடிக்கை
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்தில் சிபிஐ ஆய்வு: முதல்கட்ட விசாரணை தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in