தென்னிந்தியா முழுவதும் கைவரிசை: ‘3 ரோசஸ்’ பெண்கள் கைது

கைதான 3 ரோசஸ் பெண்கள் மீனாட்சி, குஷ்பு, லட்சுமி

கைதான 3 ரோசஸ் பெண்கள் மீனாட்சி, குஷ்பு, லட்சுமி

Updated on
1 min read

புதுச்சேரி / சென்னை: தென்​னிந்​திய அளவில் பல்​வேறு திருட்டுச் சம்​பவங்​களில் ஈடு​பட்ட மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்த ‘3 ரோசஸ் பெண்​கள்’ கும்​பல் புதுச்சேரி​யில் சிக்​கியது.

மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்த 3 பெண்​கள் தென்​னிந்​தி​யா​வில் உள்ள பல்​வேறு மாநிலங்​களில் தொடர்ச்​சி​யாக திருட்​டு​களில் ஈடு​பட்டு வந்​தனர். மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில கவனத்தை ​திருப்பி திருடு​வ​தில் இந்​தப் பெண்​கள் கைதேர்ந்​தவர்​கள்.

இதனால், இவர்​களுக்கு ‘3 ரோசஸ் பெண்​கள் திருட்​டுக் கும்பல்’ என்று போலீ​ஸார் பெயர் வைத்​தனர். குறிப்​பாக இவர்கள் ஆந்​திரா, கர்நாடகா, தமிழகத்தில் அதிக அளவில் கைவரிசை காட்டி வந்​தனர். போலீஸார் இவர்​களை பிடிப்ப​தில் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலை​யில், அண்​மை​யில் சென்னை தி.நகரில் கைவரிசை காட்​டி​விட்டு தப்​பினர். இவர்​கள் புதுச்​சேரி பகு​தி​யில் சுற்​று​வ​தாக தகவல் வந்​தது. அந்​தப் பெண்​களின் ​படத்தை புதுச்​சேரி காவல்​துறைக்கு தமிழக மற்​றும் ஆந்​திர போலீ​ஸார் அனுப்பி வைத்​தனர்.

இந்த நிலை​யில் இவர்​கள் புதுச்​சேரி அண்ணா சாலை​யில் உள்ள பிரபல துணிக்​கடை​யில் இருப்​ப​தாக தகவல் கிடைத்​தது. இதையடுத்து மாறு​வேடத்​தில் துணிக்​கடைக்​குள் போலீ​ஸார் நுழைந்​து, அவர்களை கையும் களவு​மாக மடக்​கிப் பிடித்​தனர்.

விசா​ரணை​யில் மத்​தி​யப்​பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த குஷ்பு, மீனாட்​சி, லட்​சுமி என்​பது தெரிய​வந்​தது. பின்பு அவர்​களை பெரியகடை காவல் நிலை​யத்துக்கு அழைத்​து வந்து விசா​ரித்தனர். தகவல் அறிந்​து சென்ற மாம்​பலம் போலீ​ஸார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: இந்த பெண்கள் ஹைத​ரா​பாத், பெங்​களூரு, சென்னை உள்​ளிட்ட பகு​திகளில் உள்ள கடைகளில் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி தொடர் திருட்​டில் ஈடு​படு​வதை வாடிக்​கை​யாகக் கொண்​டிருந்​தனர்.

சென்னை தரமணி​யைச் சேர்ந்த ஷாலினி பிரி​யா​விடம் 4 பவுன் நகை, சித்​தாலப்​பாக்​கத்​தில் வசிக்​கும் இலங்​கை​யைச் சேர்ந்த நடராசா கிரு​பானந்​தனின் ரூ.75 ஆயிரம் மற்​றும் ஏடிஎம் கார்டு ஆகிய​வற்றை இந்த கும்​பல் திருடியதை சிசிடிவி காட்​சிகளைக் கொண்டு உறுதி செய்​தோம்.

இந்​தநிலை​யில்​தான் புதுச்​சேரி போலீ​ஸா​ரால் கைது செய்யப்பட்டது தெரிந்தது. அவர்​களை சென்னை அழைத்து வந்து, அவர்​களிடம் ரூ.6 லட்​சத்து 44 ஆயிரம் ரொக்​கத்தை பறி​முதல் செய்​தோம்.

திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தை தங்​களுக்​குள் பங்​கிட்​டுக் கொண்​டு, அந்த பணத்​தில் சொந்த மாநிலத்​தில் வீடு, கார், நிலம் உள்​ளிட்ட சொத்​துகளை வாங்​கி​யுள்​ளனர். இவர்​கள் மீது மத்​தி​யப் பிரதேசத்​தில் பல்​வேறு குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. மூவரும் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​. இவ்வாறு கூறினர்.

<div class="paragraphs"><p>கைதான 3 ரோசஸ் பெண்கள் மீனாட்சி, குஷ்பு, லட்சுமி</p></div>
பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in