சென்னை | பழிக்கு பழி வாங்க கத்திகளுடன் பதுங்கியிருந்த 3 பேர் கைது: கொலை திட்டத்தை முறியடித்த போலீஸார்

சஞ்சய், பிரவீன், பாஸ்கர்

சஞ்சய், பிரவீன், பாஸ்கர்

Updated on
1 min read

சென்னை: பழிக்​குப் பழி​வாங்க ஆயுதங்​களு​டன் தயா​ராக நின்​றிருந்த 3 பேர் கும்​பலை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 6 கத்​தி​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. புளியந்​தோப்பு போலீ​ஸார் நேற்று முன்​தினம் மதி​யம், அதே பகுதி வ.உ.சி. நகர் 4-வது தெரு​வில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அங்கு மறை​வான இடத்​தில் 3 பேர் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. சந்​தேகத்​தின் பேரில் அவர்​களை பிடித்து விசா​ரித்​தனர். அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​த​தால் அவர்​கள் வைத்​திருந்த கைப்​பையை சோதித்​த​போது, அதில் 6 கத்​தி​கள் இருந்​தது தெரிய​வந்​தது.

போலீ​ஸார் கத்தி வைத்​திருந்த புளியந்​தோப்​பு, சுந்​தரபுரத்​தைச் சேர்ந்த சஞ்​சய் (22), வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்ற பிர​வீன் (23), கனக​ராய தோட்​டத்​தைச் சேர்ந்த விஜய் என்ற பாஸ்​கர் (21) ஆகிய 3 பேரை கைது செய்​து, கத்​தி​களை​யும் பறி​முதல் செய்​தனர்.

முன் விரோதம்: விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்ட சஞ்​சய் என்​பவருக்​கும், புளியந்​தோப்​பைச் சேர்ந்த மீன் வியா​பாரம் செய்து வரும் இளைஞர் ஒரு​வருக்​கும் முன் விரோதம் இருந்​துள்​ளது. அந்த தரப்​பினரை சஞ்​சய், தனது ஆதர​வாளர்​களு​டன் சென்று அரி​வாளால் வெட்​டி​யுள்​ளார். பதி​லுக்கு அவர்​களும் சஞ்​ச​யின் தம்​பியை வெட்​டி​யுள்​ளனர்.

இந்த முன் விரோதத்​துக்கு பழி​வாங்​கும் வகை​யில் எதிர்த்​தரப்​பைச் சேர்ந்த மீன் வியா​பாரியை கொலை செய்ய சஞ்​சய் தனது நண்​பர்​களு​டன் ஆயுதங்​களு​டன் தயா​ராக நின்​றிருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து, கைது செய்​யப்​பட்ட 3 பேரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். தொடர்ந்​து வி​சா​ரணைநடை​பெற்​று வருகிறது.

<div class="paragraphs"><p>சஞ்சய், பிரவீன், பாஸ்கர்</p></div>
மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு: மாணவர்கள் ஜன. 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in