திருவொற்றியூரில் துணை நடிகர் படுகொலை: காவல் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே பயங்கரம்

பிரதீப்ராஜ்

பிரதீப்ராஜ்

Updated on
2 min read

சென்னை: ​திருவொற்றியூரில் சினிமா துணை நடிகர் வெட்​டிக் கொல்​லப்​பட்ட சம்​பவத்​தில் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். திரு​வொற்​றியூர் மேற்கு மாட​வீதி பகு​தி​யைச் சேர்ந்​தவர் பிரதீப்​ராஜ் (30). சென்னை துறை​முகத்​தில் ஒப்​பந்த அடிப்​படை​யில் வேலை செய்து வந்​தார். சினி​மா​வில் துணை நடிக​ராக​வும் இருந்​தார்.

இவரது தாய் டில்​லி​ராணி, திரு​வொற்​றியூர் பகு​தி​யைச் சேர்ந்த நவநீதம் என்​பவரிடம் வட்​டிக்கு ரூ.9 லட்​சம் கடன் வாங்கி இருந்​தார். இந்​தப் பணத்தை தனக்கு தெரிந்த சிலருக்கு வட்​டிக்கு கொடுத்த நிலை​யில், அவர்​கள் பணத்தை திருப்பி செலுத்​தாத​தால் டில்​லி​ராணி​யால் நவநீதத்​திடம் வாங்​கிய கடனை திருப்​பிச் செலுத்த முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நவநீதம், தான் கொடுத்த கடனுக்கு அதிக வட்டிகேட்டு டில்​லி​ராணியை மிரட்​டி​னா​ராம். இதன் காரண​மாக இரு தரப்​பினருக்​கும் இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதற்​கிடை​யில் நவநீதம் அடி​யாட்​கள் மூலம் மிரட்​டிய​தாக, பிரதீப்​ராஜ் காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​தார்.

இது தொடர்​பாக திரு​வொற்​றியூர் போலீ​ஸார் விசா​ரித்​தனர். இந்த சூழலில், பிரதீப்​ராஜ் குடும்​பத்​தினர் தன்​னிடம் வாங்​கிய கடனை திருப்​பிக் கொடுக்​காமல், தனக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக நவநீதம் திரு​வொற்​றியூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இதையடுத்து பிரதீப்​ராஜ் மற்​றும் குடும்​பத்​தினரை போலீ​ஸார் கைது செய்​தனர். நீதி​மன்​றம் அவர்​களை ஜாமீனில் விடு​வித்​தது. இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு பிரதீப்​ராஜ் திரு​வொற்​றியூர் மேற்கு மாட​வீதி வழி​யாக பைக்​கில் சென்​ற​போது வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார்.

இக்​கொலை தொடர்​பாக நவநீதத்​தின் மகன் நவீன் (32), அவரது கூட்​டாளி​கள் ஹரி​கிருஷ்ணன் (21), ஜாபர் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை திரு​வொற்​றியூர் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கொலை​யின் பின்​னணி

டில்​லி​ராணி, நவநீதத்​திடம் வாங்​கிய கடனை விட அதி​கள​வில் வட்டி செலுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. ஆனால், கடனுக்​காக அடமான​மாக பெற்ற ஆவணங்​களை நவநீதம் திருப்​பிக் கொடுக்​க​வில்​லை​யாம். இதனால் இரு தரப்​பினரிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட நவீன், ஹரிகிருஷ்ணன், லோகேஷ், ஜாபர்</p></div>

கைது செய்யப்பட்ட நவீன், ஹரிகிருஷ்ணன், லோகேஷ், ஜாபர்

இந்​நிலை​யில்​தான் கடந்த செவ்​வாய்க்​கிழமை பிரதீப்​ராஜ், வழக்​கறிஞர்​களு​டன் திரு​வொற்​றியூர் காவல் நிலை​யம் சென்​று, நவநீதம் தரப்​பினர் தன்னை கொலை செய்ய வாய்ப்​புள்​ள​தாக கூறி புகார் அளித்​தார். இதற்கு மறு​நாளே எதிர் தரப்​பினர் அவரை கொலை செய்​துள்​ளனர்.

நவீன் வாக்​குமூலம்

கைதான நவீன், போலீ​ஸாரிடம் அளித்த வாக்​குமூலத்​தில், “எனது தாய் நவநீதம் டிபன் கடை நடத்​தும் இடத்​துக்கு அரு​கே, ஆண்​டு​தோறும் விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு பிரதீப்​ராஜும் அவரது நண்​பர்​களும் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்​தனர். இதனால் கடை​யில் வியா​பாரம் பாதிக்​கப்​பட்​டது.

இது தொடர்​பாக அவர்​களு​டன் எங்​களுக்கு ஏற்​கெனவே விரோதம் இருந்​தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்​னிட்டு போலீ​ஸார் இரு தரப்​பினரை​யும் அழைத்​துப் பேசினர். அப்​போது பிரதீப்​ராஜ் எங்​களை சும்மா விட​மாட்​டேன் என எச்​சரித்​தார்.

எங்​கள் உறவினர் ஒரு​வர் ரேஷன் அரிசி கடத்​து​வ​தாக புகார் அளித்​தார். மேலும், பிரதீப்​ராஜின் தாயாரும் பண விவ​காரத்​தில் எங்​களு​டன் தகராறில் ஈடு​பட்டு வந்​தார். போலீ​ஸார் முன்​னிலை​யில் ஏற்​பட்ட அவமானத்தை தாங்​கிக்​கொள்ள முடி​யாத​தால் பிரதீப்​ராஜை தீர்த்​துக்​கட்​டினோம்” என்று கூறிய​தாக தெரி​கிறது.

கொலை செய்​யப்​பட்ட பிரதீப்​ராஜ் 10-வது வார்டு தி​முக பாக முகவ​ராக இருந்​துள்​ளார். கைது செய்​யப்​பட்​ட நா​ராயணன்​ என்​ற நவீன்​, தி​முக 10-வது வார்​டு இளைஞரணி துணை அமைப்​பாள​ராக உள்​ளார்​.

<div class="paragraphs"><p>பிரதீப்ராஜ்</p></div>
‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸுக்கு டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in