மாணவி தற்கொலை வழக்கில் சிவகாசி தனியார் கல்லூரி முதல்வர் கைது

அசோக், மணிமாறன்

அசோக், மணிமாறன்

Updated on
1 min read

சிவகாசி: ​விருதுநகர் மாவட்​டம் சிவகாசி தனி​யார் கல்​லூரி மாணவி தற்​கொலை வழக்​கில், கல்​லூரி முதல்​வர் மற்​றும் அலு​வலக உதவி​யாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சிவகாசி சாட்​சி​யாபுரம் பகு​தியை சேர்ந்த பாண்​டிய​ராஜன்​-​முரு​கேஸ்​வரி தம்​பதி மகள் சோலை​ராணி (19). சிவகாசியில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் பிசிஏ இரண்​டா​மாண்டு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில், சோலை​ராணி, ஆண் நண்​பருடன் புகைப்​படம் எடுத்​ததை கல்​லூரி நிர்​வாகம் கண்​டித்​த​தால், கடந்த 20-ம் தேதி வீட்​டில் தற்​கொலை செய்​து​கொண்​டார்.

மாண​வி​யின் தற்​கொலைக்கு கல்​லூரி முதல்​வர் அசோக், அலு​வலக உதவி​யாளர் மணி​மாறன் ஆகியோர்​தான் காரணம் என்று மாணவர்​கள் புகார் தெரி​வித்​தனர். மேலும், கல்​லூரி முதல்​வரை கைது செய்​யக் கோரி, இந்​திய மாணவர் சங்​கத்​தினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில், மாணவி தற்​கொலை வழக்​கில் கல்​லூரி முதல்​வர் அசோக்கை நேற்று முன்​தினம் இரவு கைது செய்த சிவகாசி நகர் போலீ​ஸார், அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். அவரை நீதி​மன்ற ஜாமீனில் விடு​வித்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

மேலும், இந்த வழக்​கில் அலு​வலக உதவி​யாளர் மணி​மாறனை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இதற்​கிடை​யில், முதல்​வர், அலு​வலக உதவி​யாளர் கைது நடவடிக்கை ஆசிரியர், பணி​யாளர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>அசோக், மணிமாறன்</p></div>
திருப்பத்தூர்-ஓசூர் இடையே 109 கி.மீ. தொலைவுக்கு ரூ.3,911 கோடியில் ரயில் பாதை அமைக்க திட்ட அறிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in