விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி: சிவகாசி அருகே வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமான தகர ஷெட். (உள்படம்) உயிரிழந்த இன்னாசிமுத்து. ராம் பிரகாஷ்.

சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமான தகர ஷெட். (உள்படம்) உயிரிழந்த இன்னாசிமுத்து. ராம் பிரகாஷ்.

Updated on
1 min read

சிவகாசி: சிவ​காசி அருகே விவ​சாய நிலத்​தில்​ தகர ஷெட்​ அமைத்​து சட்​டவிரோத​மாக பட்​டாசு உற்​பத்​தி செய்​த​போது ஏற்​பட்​ட வெடி விபத்தில்​ 2 பேர்​ உயி​ரிழந்​தனர்​.

சிவ​காசி அரு​கே செங்​கமலப்​பட்​டியைச்​ சேர்ந்​த முன்​னாள்​ ஊராட்​சித்​ தலை​வர்​ ரவீந்​திரனின்​ மகன்​கள்​ ராமச்​சந்​திரன்​ (39), ராம்​பிர​காஷ் (30) ஆகியோ​ருக்​கு சொந்​த​மான விவ​சாய நிலம்​ நாரணாபுரம்​ சாலை​யில்​ உள்​ளது. இந்​நிலத்​தில்​ உள்​ள கிணறு அரு​கே தகர ஷெட்​ அமைத்​து சட்​ட​விரோத​மாக பட்​டாசு உற்​பத்​தி செய்​து வந்​துள்ளதாக தெரிகிறது​.

இங்​கு நேற்​று காலை 8.15 மணி​யள​வில்​ பட்​டாசு உற்​பத்​தியில்​ தொழிலாளர்கள் ஈடு​பட்​ட​போது, திடீரென வெடி விபத்​து ஏற்​பட்​டது. இதில்​, அங்​கிருந்​த மூலப்பொருட்​கள்​ மட்​டுமின்​றி ஏற்​கெனவே தயாரித்​து வைத்​திருந்த வெடிகளும்​ வெடித்​துச் சிதறின.

தகர ஷெட்​ தரைமட்​மானது. அதன்​ அரு​கே இருந்​த கார்​ தீப்​பிடித்​து எரிந்​தது. அப்​பகு​தியி​லிருந்​த 3 வீடு​களின்​ ஜன்​னல்​ கண்​ணாடிகள்​ உடைந்​தன. வெடி விபத்​தின்​ அதிர்​வு, அப்​பகு​தி​யில்​ 10 கிமீ சுற்​றளவு வரை உணரப்​பட்​ட​தால்​ மக்​கள்​ அச்​சமடைந்​தனர்​. பட்​டாசு தயாரிக்​கும்​ பணி​யில் ஈடு​பட்​டிருந்​த ராம்​பிர​காஷ், மீனம்​பட்​டியைச் சேர்ந்​த இன்​னாசி​முத்​து (45) ஆகியோர் உடல்சிதறி உயி​ரிழந்​தனர்.

விபத்​து நடந்​த​போது அனை​வருக்​கும்​ கடையி​லிருந்​து டீ வாங்​கிக்​ கொண்​டு வந்​த ராமச்​சந்​திரன்​, ஷெட்​டின்​ அரு​கே தனது பைக்​கை நிறுத்​திக்​கொண்​டிருந்​தார்​. அப்​போது அவரது உடலில் தீப்​பிடித்​தது. இதில்​, அவர்​ படு​காயமடைந்​தார்​.

தகவலறிந்​து வந்​த போலீ​ஸார்​ மற்​றும்​ தீயணைப்​புத் துறை​யினர்​ நீண்ட நேரத்​ தேடு​தலுக்​குப் பின்​பு அப்​பகு​தி​யின்​ பல இடங்களில்​ சிதறிக்​ கிடந்​த ராம்​பிர​காஷ், இன்​னாசி​ முத்​து ஆகியோரின் உடல்​ பாகங்​களை சேகரித்​தனர்​. படுகாயமடைந்த ராமச்​சந்​திரன் சிவ​காசி அரசு மருத்​து​வ​மனைக்​கு அனுப்​பி வைத்​தனர்​.

இதைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்​துக்கு விரைந்த​ சிவ​காசி சார்​ஆட்​சி​யர்​ முகமதுஇர்ஃ​பான்​ பாதிப்புகளை ஆய்​வு செய்​தார்​. இந்​த விபத்​து குறித்​துசிவ​காசி கிழக்​கு போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர்​ மா​யம்​? - பட்​டாசு தயாரிப்​பின்​போது ராம்​பிர​காஷ், இன்​னாசி​முத்​து ஆகியோ​ருடன்​ அய்​யப்​ப​ராஜ், பாண்​டிதுரை ஆகியோரும்​ இருந்​த​தாக அவர்​களது உறவினர்​களும்​, அப்​பகு​தி மக்​களும்​ தெரி​வித்​தனர்​. எனினும்​, வெடி விபத்​தில்​ ராம்​பிர​காஷ், இன்​னாசி​முத்​து ஆகியோர்​ உயி​ரிழந்​ததை மட்​டுமே போலீ​ஸா​ரால்​ நேற்​று உறு​திப்​படுத்​த முடிந்​தது. மற்ற இரு​வரும்​ மாய​மான​தாக போலீ​ஸார்​ முதல்​ தகவல்​ அறிக்​கை​யில்​ பதிவு செய்​துள்ளனர்​. உயி​ரிழந்​த இன்​னாசி​முத்​து​வின்​ சகோ​தரர்​ அய்​யப்​ப​ராஜ் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதுகுறித்​து போலீ​ஸார்​ கூறுகை​யில்​, விபத்​து நடந்​த தகர ஷெட்​டில்​ இருந்​த பொருட்​கள்​ முற்​றி​லும்​ எரிந்​த​தால்​ அய்​யப்​ப​ராஜ், பாண்​டிதுரை ஆகியோர்​ விபத்​து நடந்​த இடத்​தில்​ இருந்​ததற்​​கான எந்​த ஆ​தா​ர​மும்​ இல்​லை. இதையடுத்து உறவினர்​கள்​ அளித்​த தகவலின்​பேரில்​ மாயமான​தாக வழக்​குப்​ பதிவு செய்​து வி​சா​ரித்​து வரு​கிறோம்​ என்​று தெரிவித்தனர்​.

<div class="paragraphs"><p>சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமான தகர ஷெட். (உள்படம்) உயிரிழந்த இன்னாசிமுத்து. ராம் பிரகாஷ்.</p></div>
காமன்வெல்த் 2026: பளுதூக்குதலில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றார் மீராபாய் சானு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in