சென்னை | பரதநாட்டியம் பயில சென்ற இடத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது

சென்னை | பரதநாட்டியம் பயில சென்ற இடத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது
Updated on
1 min read

சென்னை: நந்​தம்​பாக்​கத்​தைச் சேர்ந்த முன்​னாள் கடற்​படை அதி​காரி ஒரு​வரது 12 வயது மகள் கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த பரத​நாட்​டியக் கலைஞரிடம் மாலை நேர பரத​நாட்​டிய வகுப்​புக்கு சென்று வந்​தார்.

கடந்த 8 மாத​மாக சிறுமி பரதநாட்டியம் கற்று வரு​கிறார். வழக்​கம்​போல் கடந்த 28-ம் தேதி மாலை​யும் வகுப்​புக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது நடனக் கலைஞரின் கணவர், சிறுமியை தனி​யாக அழைத்து பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டுள்​ளார்.

அதிர்ச்சி அடைந்த சிறுமி வீடு திரும்​பியதும் இது தொடர்​பாக பெற்​றோரிடம் அழுத​படி தெரி​வித்​துள்​ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி​யின் பெற்​றோர் இது தொடர்​பாக கோட்​டூர்​புரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தனர்.

அதன்​படி, போலீ​ஸார் விசா​ரித்​தனர். இதில் பரத​நாட்​டியக் கலைஞரின் கணவர் சிறுமி​யிடம் அத்​து​மீறியது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவர் மீது போக்சோ உட்பட மேலும் சில பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து பரத​நாட்​டியக் கலைஞரின் கணவரை கைது செய்​தனர்.

இவர் தேனாம்​பேட்​டை​யில் உள்ள தலை​மைக் கணக்​காயர் அலு​வல​கத்​தில் அதி​காரி​யாக பணி​யாற்றி கடந்த பிப்​ர​வரி மாதம்​தான் ஓய்வு பெற்​றிருந்​தார் என்​ப​து குறிப்பிடத்தக்கது.

சென்னை | பரதநாட்டியம் பயில சென்ற இடத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி: சென்னையின் 16 தொகுதிகளுக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in