வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி: சென்னையின் 16 தொகுதிகளுக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் உள்ள 16 தொகுதி வாக்குகள் எண்​ணும் பணி​யில் ஈடுபட உள்ள அலு​வலர்​களுக்​கான பயிற்சி நேற்று வள்​ளுவர் கோட்​டத்​தில் நடை​பெற்​றது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், சென்னை மாவட்​டத்​தில் 16 தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வாக்கு எண்​ணிக்கை மையங்​களான ராணி மேரி கல்​லூரி, லயோலா கல்​லூரி மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் வைக்​கப்​பட்​டு, தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை பணி நடை​பெறு​வதை முன்​னிட்​டு, வாக்கு எண்​ணிக்கை பணி​யில் ஈடு​பட​வுள்ள தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள், நுண் பார்​வை​யாளர்​கள், உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள் மற்​றும் உதவி​யாளர்​களுக்கு தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, அவர்​களின் பணி​கள் தொடர்​பான செயல்​முறை பயிற்சி வகுப்பு கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர் க.கற்​பகம் தலை​மை​யில் நேற்று நுங்கம்பாக்கம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உள்ள திரு​வள்​ளுவர் அரங்​கில் நடை​பெற்​றது.

மேலும் சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் தபால் வாக்​கு​கள் தனி​யாக தலா 4 மேசைகளி​லும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் தலா 14 மேசைகளி​லும் எண்​ணப்​படும்.

இதில் ராணி மேரி கல்​லூரி வாக்கு எண்​ணிக்கை மையத்​தில் ஆர்​.கே.நகர் தொகு​திக்கு 18 சுற்​றுகளாக​வும், திரு.​வி.க. நகர் - 17, ராயபுரம் - 14, துறை​முகம் -14, சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி -17 சுற்​றுகளாக​வும் வாக்​கு​கள் எண்​ணப்​படும்.

லயோலா கல்​லூரி மையத்​தில் பெரம்​பூர் - 22 சுற்​றுகளாக​வும், கொளத்​தூர்- 21, வில்​லி​வாக்​கம்- 19, எழும்​பூர் -15, ஆயிரம் விளக்கு -18, அண்​ணாநகர்- 20 சுற்​றுகளாக​வும் வாக்​கு​கள் எண்​ணப்​படும்.

அண்ணா பல்​கலைக்​கழக மையத்​தில் விரு​கம்​பாக்​கம் -23, சைதாப்​பேட்​டை- 21, தியாக​ராயநகர்​-18, மயி​லாப்​பூர்​--20, வேளச்​சேரி- 23 சுற்​றுகளாக வாக்​குகள் எண்ணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மே 7-ம் தேதி குரூப்-2 5-வது கட்ட கலந்தாய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in