சிவகங்கை: காவல் ஆய்வாளரை தாக்க முயன்ற பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு

ஊர்காவலன்

ஊர்காவலன்

Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்​பாச்​சேத்தி அருகே தன்னை தாக்க முயன்ற ரவுடியை, காவல் ஆய்​வாளர் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தார்.

சிவகங்கை அருகே மாத்​தூரைச் சேர்ந்த ‘ஏ பிளஸ்’ சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி ஊர்​காவலன் (31). தற்​போது மிக்​கேல்​பட்​டினத்​தில் வசிக்​கிறார். இவர் மீது 3 கொலை வழக்​கு​கள், 2 கொலை முயற்சி வழக்​கு​கள் உட்பட 33 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. திருப்பாச்​சேத்தி காவல் நிலை​யத்​தில் நிலு​வை​யிலுள்ள 3 வழக்​கு​களுக்​காக ஊர்​காவலனை போலீ​ஸார் தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில் அவர் திருப்​பாச்​சேத்தி அருகே கானூர் மயானப் பகு​தி​யில் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. அங்கு சென்ற ஆய்​வாளர் குமர​வேல்​ பாண்​டியன் தலை​மையிலான போலீ​ஸார் ஊர்​காவலனை கைது செய்ய முயன்​றனர்.

ஆனால், அவர் காவல் ஆய்வாளரை ஆயதங்​களால் தாக்க முயன்​ற​தாகக் கூறப்​படு​கிறது. எச்​சரிக்​கும் வகை​யில் ஆய்​வாளர் துப்​பாக்​கி​யால் வானை நோக்​கிச்சுட்டார். அப்​போதும் ஊர்​காவலன் தாக்க முயற்​சித்​த​தால், ஆய்வாளர் குமர​வேல்​பாண்​டியன் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் ஊர்​காவலனின் வலது காலில் குண்டு பாய்ந்தது.

காயமடைந்த அவருக்கு திருப்​புவனம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. பின்​னர் தீவிர சிகிச்​சைக்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்கப்​பட்​டார். இந்தச் சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.

<div class="paragraphs"><p>ஊர்காவலன்</p></div>
“மம்தா அரசு அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது” - பிரதமர் மோடி கடும் சாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in