வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை

வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை
Updated on
1 min read

சென்னை: வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை குறித்​து, போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். ஓட்​டேரி, எஸ்​விஎம் நகரை சேர்ந்​தவர் அஜய் (20).

ரவுடி​யான இவர், நேற்று முன்​தினம் இரவு 11.30 மணி​யள​வில் பழைய வண்​ணாரப்​பேட்​டை, ராம​தாஸ் நகரைச் சேர்ந்த கூட்​டாளி​யான காஜல் (24) என்​பவரை அவரது வீட்​டில் இறக்கிவிட்டு பைக்​கில் தனது வீட்​டுக்கு திரும்பி கொண்​டிருந்​தார்.

அப்​போது, 2 பைக்​கு​களில் வந்த 4 பேர் கொண்ட கும்​பல் அஜய்யை வழிமறித்து அரி​வாளால் சரமாரி​யாக வெட்டி கொலை செய்து விட்டு தப்​பியது.

தகவல் அறிந்​து, வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து அஜய் உடலை கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

கொலைக்​கான காரணம் என்ன, கொலை​யாளி யார் என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். முதல் கட்​ட​மாக சம்பவ இடம் மற்​றும் அதைச் சுற்​றி​உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை கைப்​பற்றிய போலீ​ஸார் குற்​ற​வாளி​களை அடை​யாளம் காண முயற்சி செய்து வரு​கின்​றனர்.

வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை
தி.நகர் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்றது குறித்து விளக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in