ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.1.23 கோடி மோசடி: ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டு ஆசைகாட்டி ஏமாற்றியவர் கைது

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.1.23 கோடி மோசடி: ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டு ஆசைகாட்டி ஏமாற்றியவர் கைது
Updated on
1 min read

சென்னை: வில்​லி​வாக்​கத்​தைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற மின்​வாரிய அதி​காரி மகேந்​திரன் (66). இவரை செல்போனில் அழைத்து பேசிய நபர் “ஆன்​லைன் பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​தால் அதிகலாபம் கிடைக்​கும். இதற்கு தேவை​யான உதவி​களை செய்து தரு​கிறேன்” என ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.

இதை நம்​பிய மகேந்​திரன் அந்த நபர் அறி​வுறுத்​திய பங்​கில் முதலீடு செய்​துள்​ளார். அதன்​படி அதிக லாபம் கிடைத்துள்​ளது. அந்த லாப பணத்தை அவர் எடுக்க முயன்​றபோது முடியவில்லை.

இதுகுறித்து கேட்​ட​போது, மேலும் பணத்தை முதலீடு செய்ய அறி​வுறுத்​தி​யுள்​ளனர். இதையடுத்து மகேந்​திரன் பல்​வேறு தவணை​களாக அவர்​கள் குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​கு​களில் ரூ.1.23 கோடி செலுத்​தி​யுள்​ளார். ஆனால் அவர் செய்த முதலீடு, அதற்​கான லாபம் எது​வும் கிடைக்​க​வில்​லை.

தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த மகேந்​திரன், அளித்த புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பண மோசடியில் ஈடு​பட்​டது ஈரோடு மூலப்​பாளை​யத்​தைச் சேர்ந்த செந்​தில் குமார் (41) என்​பது தெரிய​வந்​தது.

இவர் அங்​குள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் மேலா​ள​ராக​வும் பணி செய்து வந்​துள்​ளார். இதையடுத்து அவரை போலீ​ஸார் கைது செய்​து வி​சா​ரிக்கின்றனர்.

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.1.23 கோடி மோசடி: ஆன்லைன் பங்குச்சந்தை முதலீட்டு ஆசைகாட்டி ஏமாற்றியவர் கைது
போரூர் - வடபழனி தடத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in