சென்னை காவலரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை என நாடகமாடி ரூ.60 லட்சம் பறித்த 2 ரயில்வே போலீஸார் கைது

சென்னை காவலரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை என நாடகமாடி ரூ.60 லட்சம் பறித்த 2 ரயில்வே போலீஸார் கைது
Updated on
1 min read

திருச்சி: சென்னை போலீஸ்​காரரிடம் லஞ்ச ஒழிப்​புத் துறை என்று நாடக​மாடி ரூ.60 லட்​சம் பறித்த, திருச்​சி​யைச் சேர்ந்த 2 ரயில்வே போலீ​ஸார் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோ​விலை அடுத்த வளை​யம்​பட்டி அருள்​நகரைச் சேர்ந்​தவர் ச.ஆரோக்​கிய ஜான்​கென்​னடி(32). சென்​னை​யில் உள்ள ஐ.ஜி. ஒரு​வரின் வீட்​டில் ஆர்​டர்​லி​யாகப் பணி​யாற்றி வரும் இவர், நிலம் வாங்​கு​வதற்​காக ரூ.60 லட்​சம் பணத்​துடன் அக். 30-ம் தேதி சென்​னையி​லிருந்து ரயில் மூலம் திருச்சி வந்​தார். திருச்சி ரயில் நிலைய நடைமேடை​யில் அவரை அணுகிய 3 பேர், தங்​களை லஞ்ச ஒழிப்​புத்துறை போலீ​ஸார் என்று கூறிக் கொண்​டு, அவரது உடமை​களை சோதனை​யிட்​டனர்.

பின்​னர், அவரது பையில் இருந்த ரூ.60 லட்​சத்தை எடுத்​துக்​கொண்​டு, “நாங்​கள் அழைக்​கும்​போது நீங்​கள் காவல் நிலை​யம் வரவேண்​டும்” என்று கூறி​விட்​டு, அங்​கிருந்து சென்​று​விட்​டனர். பின்​னர் சந்​தேகமடைந்த ஆரோக்​கிய ஜான்​கென்​னடி விசா​ரித்​த​போது, லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் யாரும் சோதனைக்கு வரவில்லை என்​பது தெரிய​வந்​தது.

தான் ஏமாற்​றப்​பட்​டதை அறிந்த அவர், கடந்த 19-ம் தேதி திருச்சி ரயில்வே போலீ​ஸில் புகார் அளித்​தார். போலீ​ஸார் விசா​ரணை​யில், திருச்சி ரயில்வே காவல் நிலை​யத்​தில் போலீஸ்​காரர்​களாகப் பணி​யாற்​றும் நவலூர் குட்​டப்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்த ஜான்​சன் கிறிஸ்டோ குமார்​(43), கம்​பரசம்​பேட்டை தீனத​யாள்​(37) ஆகியோர் ஆரோக்​கிய ஜான்​கென்​னடி​யிடம் பணம் பறித்​தது தெரிய​வந்​தது. அவர்​கள், தங்​களது நண்​பர்​களான திரு​வெறும்​பூரைச் சேர்ந்த ரியல் எஸ்​டேட் தரகர்​கள் ரஞ்​சித்​(40), ராஜேந்​திரன்​(45) ஆகியோ​ருடன் சேர்ந்து ஆரோக்​கிய ஜான் கென்​னடி​யிடம் பணத்​தைப் பறித்​துள்​ளனர்.

இதையடுத்​து, திருச்சி ரயில்வே காவல் நிலைய ஆய்​வாளர் ஷீலா தலை​மையி​லான போலீ​ஸார், ஜான்​சன் கிறிஸ்டோ குமார், தீனத​யாள், ரஞ்​சித், ராஜேந்​திரன் ஆகியோரைக் கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, திருச்சி மத்​திய சிறை​யில் அடைத்​தனர். இதற்​கிடை​யில், ஜான்​சன் கிறிஸ்டோ குமார், தீன​த​யாள் ஆகிய இரு​வரை​யும் சஸ்​பெண்ட் செய்து திருச்சி ரயில்வே எஸ்​.பி. ராஜன் உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை காவலரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை என நாடகமாடி ரூ.60 லட்சம் பறித்த 2 ரயில்வே போலீஸார் கைது
துபாய் சாகச‌ நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவையில் ஆட்சியர் அஞ்சலி: முதல்வர் இரங்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in