புதுச்சேரியில் ‘ஜனநாயகன்’ திரைப்பட பேனர் விழுந்து ஒருவர் படுகாயம்: 3 பேர் கைது

புதுச்சேரியில் ‘ஜனநாயகன்’ திரைப்பட பேனர் விழுந்து ஒருவர் படுகாயம்: 3 பேர் கைது

படம்: மெட்டா ஏஐ

Updated on
1 min read

புதுச்சேரி: ‘ஜனநாயகன்’ படத்தின் பேனர் விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் படுகாயம் அடைந்தார். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 7 விஜய் ரசிகர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த தனசேகரன் (64) ஓய்வு பெற்ற தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தபால்காரர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பேனர் திடீரென சரிந்து, தனசேகரன் மீது விழுந்தது.

இதனால் நிலைதடுமாறிய தனசேகரன், அங்கிருந்து பெரிய வாய்க்காலில் விழுந்தார். இதில் மூச்சு திணறி மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தனசேகரன் இருப்பதால், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பொது இடத்தை சேதப்படுத்தல், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பேனர் வைத்த தவெக நிர்வாகி கில்லி செல்வா, கார்த்திக், அருண்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பிரவீன், சச்சின், செபாஸ்டியன், மாதவன், புவியரசு, அருள், பிரவீன் ஆகிய 7 பேரை தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் ‘ஜனநாயகன்’ திரைப்பட பேனர் விழுந்து ஒருவர் படுகாயம்: 3 பேர் கைது
“தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” - ராமதாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in