குறைந்த வட்டிக்கு நகை கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி: தனியார் நிதி நிறுவனத்தினர் கைது

சுரேந்​தர், காஜா

சுரேந்​தர், காஜா

Updated on
1 min read

சென்னை: மவுலி​வாக்​கத்​தைச் சேர்ந்​தவர் கணேஷ். தனி​யார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரு​கிறார். இவருக்கு சேத்​துப்பட்​டைச் சேர்ந்த, தனி​யார் நிதி நிறு​வனம் நடத்​தி வரும் சுரேந்தர், அந்​நிறு​வனத்​தில் இயக்​குந​ராக உள்ள சூளைமேட்​டைச் சேர்ந்த காஜா மொய்​தீன் பஷித் ஆகியோரது அறி​முகம் கிடைத்​தது.

இந்​நிலை​யில், தொழிலை விரிவுபடுத்​தும் வகை​யில் தன்​னிட​மிருந்த 238 பவுன் நகைகளை (சு​மார் ரூ.2 கோடி மதிப்​பு) வங்​கி​யில் அடமானம் வைத்து ரூ.1 கோடி பணம் பெற்​றிருந்​தார்.

அதை மீட்க முடி​யாமல் தவித்​தார். அப்​போது, சுரேந்​தர் நாங்​கள் உங்​கள் நகைகளை மீட்​டு தரு​கிறோம். மேலும், எங்​கள் நிதி நிறு​வனத்​தில் அடமானம் வைத்​தால் அதிக பணம் தரு​கிறோம். அதோடு குறைந்த வட்டி என ஆசை​வார்த்தை கூறினர். இதையடுத்​து, நகை மீட்​கப்​பட்​டு, சுரேந்​தர் நிதி நிறு​வனத்​தில் மறு அடகு வைக்​கப்​பட்​டது.

ஆனால், உறுதி அளித்தபடி நகைக்​கான கூடு​தல் பணத்தை தராமல் ஏமாற்​றிய​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்​து, கணேஷ் தனது நகை கடன் முழு​வதை​யும் வட்​டி​யுடன் தந்து விடு​வ​தாகக் கூறி மொத்த நகைகளை​யும் திரும்​பத் தரு​மாறு கேட்​ட​போது நகைகள் திரும்ப கொடுக்​கப்​பட​வில்​லை.

இதனால், விரக்தி அடைந்த கணேஷ் இது குறித்து சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​த​தார். அதன்​படி, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், நகை பெற்று மோசடி செய்​யப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, சுரேந்​தர்​, ​காஜா மொய்​தீன்​ பஷித்​ ஆகிய இரு​வரை​யும்​ போலீஸார்​ கைது செய்​தனர்​.

<div class="paragraphs"><p>சுரேந்​தர், காஜா</p></div>
2025-ல் சென்னையில் குற்றச் செயல்கள் குறைந்தன: காவல் ஆணையர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in