சென்னை | வங்கிக்குள் புகுந்து திருட முயற்சி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது

சென்னை | வங்கிக்குள் புகுந்து திருட முயற்சி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
Updated on
1 min read

சென்னை: வங்​கிக்​குள் புகுந்து திருட முயன்று தலைமறை​வாக இருந்த தனி​யார் நிறுவன ஊழியர் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, மேற்கு மாம்​பலத்​தில் தனி​யார் வங்கி ஒன்று செயல்​பட்டு வரு​கிறது.

வழக்​கம்​போல் கடந்த 4-ம் தேதி இரவு இந்த வங்கி பூட்​டப்​பட்​டது. மறு​நாள் காலை ஊழியர்​கள் வந்து பார்த்​த​போது, வங்​கி​யின் ஷட்​டரில் இருந்த 3 பூட்​டு​கள் உடைக்​கப்​பட்​டிருந்​தன.

உள்ளே புகுந்த நபர் வங்​கி​யில் வைத்​திருந்த பணம், நகைகளைத் திருட முயன்​றுள்​ளார். முடி​யாத​தால் வங்கி ஆவணங்​களை சூறை​யாடி​விட்​டுத் தப்​பிச் சென்​றது தெரிய​வந்​தது.

கட்டிங் மெஷின்

இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக வங்​கி​யில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன.

அதன்​மூலம் வங்​கி​யில் திருடும் முயற்​சி​யில் ஈடு​பட்​டது திரு​வண்​ணா​மலை மாவட்​டம், ஜமீன் கூடலூரைச் சேர்ந்த மோசஸ் சவுந்​தர் (26) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் மோசஸ் சவுந்​தர் மேற்கு மாம்​பலம் பகு​தி​யில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்து வந்​ததும், இவர் வங்​கியை நோட்​ட​மிட்டு கடந்த 4-ம் தேதி இரவு கட்​டிங் மெஷின் மூலம் வங்கி ஷட்​டரின் பூட்​டு​களை அறுத்து வங்​கி​யில் நுழைந்து திருட முயன்​றதும் தெரிய​வந்​தது. இதையடுத்து அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

சென்னை | வங்கிக்குள் புகுந்து திருட முயற்சி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் - இன்று அறுபத்து மூவர் விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in