நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு

உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு
Updated on
1 min read

நாகர்கோவில்: ​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விசா​ரணைக் கைதி உயி​ரிழந்த சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​உள்​ளது.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்​கு ​தாமரைகுளம் அருகே நாராயணன்​புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சபரிவர்​மன் (33). இவர் அப்​பகு​தி​யில் கடை நடத்தி

வந்​தார். கடந்த 9-ம் தேதி மதி​யம் 1.30 மணி​யள​வில் இவரது கடை​யில் தென்​தாமரகுளம் போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அரசால் தடை செய்​யப்​பட்ட குட்கா பொருட்​கள் இவரது கடை​யில் இருந்​த​தாகக் கூறி, சபரிவர்​மனை கைது செய்து நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர். கடந்த 4 நாட்​களாக அவர் விசா​ரணை கைதி என்ற நிலை​யில் இருந்​துள்​ளார்.

சிறை அறை​யில் நேற்று அதி​காலை​யில் சபரிவர்​மன் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாகக் கூறப்​படு​கிறது. போலீ​ஸார் அவரை ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​த​போது சபரிவர்​மன் ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. இத்​தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டதும் அவர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

சபரிவர்​மனை போலீ​ஸார் பலமாக தாக்கி உள்​ள​தாக​வும், அவருக்கு எந்​த​வித நோய் பாதிப்​பும் கிடை​யாது எனவும் உறவினர்​கள் குற்​றம்​சாட்​டினர். மருத்​து​வ​

மனை வளாகத்​தில் திரண்டு அவர்​கள் போராட்​டம் நடத்​தினர். போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களிடம் எஸ்​.பி. ஸ்டா​லின் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதையடுத்​து, போராட்​டம் கைவிடப்​பட்​டது.

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு
“ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்; கப்பல்களுக்கு 20% கட்டணம்” - ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in