பெருமாநல்லூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது

பெருமாநல்லூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது
Updated on
1 min read

திருப்பூர்: பெரு​மாநல்​லூர் பகு​தி​யில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போக்சோ சட்​டத்​தின் கீழ் அவி​நாசி போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருப்​பூர் மாவட்​டம் பெரு​மாநல்​லூர் பகு​தி​யில் உள்ள கிராமத்​தில் அரசு உதவி பெறும் தொடக்​கப்​பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இந்​தப் பள்​ளி​யின் அருகே மத வழி​பாட்​டுத் தலம் அமைந்​துள்​ளது. இதில் மத போதக​ராக ராபர்ட் (58) என்​பவர் செயல்​பட்டு வரு​கிறார்.

இந்​நிலை​யில், பள்​ளி​யில் படித்து வந்த 7 வயது சிறுமிக்கு ராபர்ட் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்​பாக சிறுமி பெற்​றோரிடம் தெரி​வித்த நிலை​யில், அவி​நாசி அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் பெற்​றோர் புகார் அளித்​தனர்.

இது தொடர்​பாக விசா​ரணை மேற்​கொண்ட போலீ​ஸார், போக்சோ பிரி​வின் கீழ் வழக்கு பதிவு செய்​து, பாதிரி​யார் ராபர்ட்டை கைது செய்​தனர்.

பெருமாநல்லூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது
நகை திருடியதாக புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் நோட்டீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in