

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம்.முருகனின் இல்லத்தில், சிவக்குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜூன் 16-ம் தேதி எம்எல்ஏ மனைவி, மேலாளர் சிவக்குமாரிடம் ரூ.42.5 லட்சம் பணத்தை கொடுத்து சீர்காழியில் உள்ள தனது மகளிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.
பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்ற சிவக்குமார், சீர்காழி அருகே பணம் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், சீர்காழி போலீஸார் விசாரித்ததில் சிவகுமாரும், அவரது தோழி கவிதா என்பவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.