ரூ.43 லட்சம் திருடிய பூம்புகார் எம்எல்ஏவின் மேலாளர், பெண் கைது

ரூ.43 லட்சம் திருடிய பூம்புகார் எம்எல்ஏவின் மேலாளர், பெண் கைது
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​கார் தொகுதி எம்​எல்ஏ நிவேதா எம்​.​முரு​க​னின் இல்​லத்​தில், சிவக்​கு​மார் என்​பவர் கடந்த 10 ஆண்​டுகளாக மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், ஜூன் 16-ம் தேதி எம்​எல்ஏ மனை​வி, மேலா​ளர் சிவக்​கு​மாரிடம் ரூ.42.5 லட்​சம் பணத்தை கொடுத்து சீர்​காழி​யில் உள்ள தனது மகளிடம் கொடுக்க சொல்​லி​யுள்​ளார்.

பணத்தை இருசக்கர வாக​னத்​தில் வைத்து எடுத்​துச் சென்ற சிவக்​கு​மார், சீர்​காழி அருகே பணம் காணா​மல் போன​தாக​ தெரி​வித்​துள்​ளார். புகாரின்​பேரில், சீர்​காழி போலீ​ஸார் விசாரித்ததில் சிவகுமாரும், அவரது தோழி கவிதா என்பவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

ரூ.43 லட்சம் திருடிய பூம்புகார் எம்எல்ஏவின் மேலாளர், பெண் கைது
நீட் எழுதும் மாணவர்களின் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in