

திருச்சி: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ்குமார் என்பவர் மதுபோதையில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனையின் முடிவில், சதீஷ்குமார் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியின் உத்தரவின்படி, பணியின்போது மதுபோதையில் இருந்த சதீஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.