உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மகாலிங்கம்

மகாலிங்கம்

Updated on
1 min read

மதுரை: உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த பட்​டா​லியன் பிரிவு காவலர் துப்பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

மதுரை மாவட்​டம் பேரையூர் அரு​கே​யுள்ள இ.கோட்​டைப்​பட்​டியைச் சேர்ந்த மாணிக்​கம் மகன் மகாலிங்​கம் (30). இவர் 2023-ம் ஆண்​டில் காவல் துறை​யில் பணி​யில் சேர்ந்​தார். இவரது சகோ​தரரும் தேனி மாவட்ட காவல் துறை​யில் பணிபுரி​கிறார்.

மதுரை​யில் உள்ள 6-வது பட்​டா​லியன் பிரி​வில் காவல​ராகப் பணி​யாற்​றிய மகாலிங்​கம், கடந்த சில மாதங்​களாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வளாகத்​தில் மெயின் கேட் பகு​தி​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்டு வந்​தார்.

நேற்று முன்​தினம் இரவு பணி​யில் இருந்த அவர்​,நேற்று அதி​காலை திடீரென தான் வைத்​திருந்த துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தகவலறிந்த உயர் நீதி​மன்ற காவல் நிலைய போலீ​ஸார் மகாலிங்​கத்​தின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “மகாலிங்​கம் பணி​யில் சேர்ந்த பிறகு, அவருக்கு குடும்​பத்​தினர் திரு​மணம் செய்து வைக்க முயற்​சித்​துள்​ளனர்.

ஆனால், அதற்கு மகாலிங்​கம் மறுப்​புத் தெரி​வித்து வந்​துள்​ளார். இந்​நிலை​யில்​தான், அவர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார்” என்​றனர்.

இறப்​ப​தற்கு முன்பு அவர் எழுதி வைத்​திருந்த கடிதத்தை போலீ​ஸார் கைப்​பற்​றினர். அதில், “எனது இறப்​புக்கு வேறு யாரும் காரணம் அல்ல.

இது நானே எடுத்த முடிவு. எனது தற்​கொலை குறித்து யாரிட​மும் விசா​ரிக்க வேண்​டாம்” என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. எனினும், அவரது தற்​கொலைக்கு காதல் விவ​காரம் காரணமா என்ற கோணத்​தி​லும் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>மகாலிங்கம்</p></div>
4 நாட்களுக்கு தொடர் மழை: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in