பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

சென்னை: வேலூர் மேல்​விஷாரத்தை அடுத்த கீழ்​விஷாரம் பகு​தி​யில் கடந்த 14-ம் தேதி வேலூர் இப்​ராஹிம் தலை​மை​யில் பாஜக தெரு​முனைப் பிரச்​சா​ரக் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பாஜக மாநிலச் செய​லா​ளர் அமர்​பிர​சாத் ரெட்டி சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​ கொண்டு உரை​யாற்​றி​னார்.

இந்​தக்கூட்​டத்​தில் பங்​கேற்ற சில நாட்​களி​லேயே, அவருக்கு அடை​யாளம் தெரி​யாத நபர்​களிட​மிருந்து கொலை மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக டிஜிபி அலு​வல​கத்​துக்கு மின்​னஞ்​சல் மூலம் மிரட்​டல் வந்​துள்​ளது.

அதில், “முஸ்​லிம்​கள் எப்​போதும்பாஜக​வுக்கு வாக்​களிக்க மாட்​டார்​கள். நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற அமர்​பிர​சாத் ரெட்டி, பிரதமர் மோடியை ஆதரித்​துப் பேசி​னார். எங்​கள் சமூகத்​துக்கு எதி​ராக பேச யாரை​யும் அனு​ம​திக்க மாட்​டோம்.

கணிக்க முடி​யாத நேரத்தில் அவரது இல்​லத்​தில் 2 கிலோ ஆர்​டிஎக்ஸை வைப்​போம். தமிழகத்​தில் முஸ்​லிம்​களுக்கு எதிராக பேச அனு​மதி அளித்த போலீ​ஸாருக்கு இது ஒரு சவால்.

உங்​களால் முடிந்​தால், அமர் பிரசாத் ரெட்​டியை காப்​பாற்ற முயற்​சிக்​க​வும்” என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இந்த மிரட்​டல் மின்​னஞ்​சல் தொடர்​பாக தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து வேலூர் இப்​ராஹிமிடம் கேட்​ட​போது, “மக்​களிடையே நாங்​கள் கொண்டு செல்​லும் கருத்​துகளை பொறுத்​துக்​கொள்ள முடி​யாத சில சக்​தி​கள், எனக்​கும் அமர்​பிர​சாத் ரெட்​டிக்​கும் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளன. இது​போன்ற மிரட்​டல்​களுக்கு நாங்​கள் அஞ்​சப்​போவ​தில்​லை. இந்த மிரட்​டல்​கள் குறித்​து விரை​வில்​ டிஜிபி-​யிடம்​ புகார்​ அளிக்​க உள்​ளோம்​” என்​றார்​.

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை
உலக அரங்கில் முன்னிலை வகிக்க சென்னையின் வளர்ச்சி பல மடங்காக வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in