காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் வழக்கில் ‘போலீஸ்’ கார்த்தியை தேடும் போலீஸார்

பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்
காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் வழக்கில் ‘போலீஸ்’ கார்த்தியை தேடும் போலீஸார்
Updated on
1 min read

கோவை: கோவை​யில் காங்​கிரஸ் நிர்​வாகி கடத்​தல் வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்​ற​வாளி​யான ‘போலீஸ்’ கார்த்​தியை போலீ​ஸார் தீவிர​மாகத் தேடி வரு​கின்​றனர். இவருக்கு பல்​வேறு குற்​றச் சம்​பவங்​களில் தொடர்​புள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

கோவை சிங்காநல்லூர் எஸ்​.ஐ.எச்​.எஸ். காலனியைச் சேர்ந்த காங்​கிரஸ் பிர​முக​ரான தனசேகர்​(53) என்​பவரை, கடந்த 5-ம் தேதி மர்ம நபர்​கள் கடத்​தி, ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்​டினர். பின்​னர், ஆள்​மாற்றி கடத்​தி​யது தெரிய​வந்​த​தால் அவரை பாலக்​காடு சாலை​யில் இறக்​கி​விட்​டுச் சென்​றனர். இந்த ​சம்​பவம் தொடர்​பாக சிங்​காநல்​லூர் போலீ​ஸார் வழக்​குப்​பதிந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இவ்​வழக்​கில் தொடர்​புடைய​வர்​களை பிடிக்க 3 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில், கரூரைச் சேர்ந்த வைரபெரு​மாள்​(30) என்​பவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். மேலும், ‘போலீஸ்’ கார்த்​தி, திருச்சி மூர்த்​தி, அன்​பு, திருநெல்​வேலியைச் சேர்ந்த ஒரு​வர் உள்​ளிட்ட 5 பேரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

இதில் முக்​கிய குற்​ற​வாளி​யான ‘போலீஸ்’ கார்த்தி குறித்து போலீ​ஸார் கூறிய​தாவது:

மோசடி புகாரில் பணிநீக்கம்: கோவை மாவட்​டம் துடியலூரை அடுத்த இடிகரையைச் சேர்ந்​தவர் கார்த்​தி. கடந்த 2003-ம் ஆண்டு காவல​ராகப் பணி​யில் சேர்ந்த இவர், பெண்​ணிடம் நகை​யைப் பறித்து மோசடி செய்த புகாரில் சிக்​கிய​தால், 2005-ம் ஆண்டு பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டார். இவ்​வழக்​கில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​த​போது, மற்ற குற்​ற​வாளி​களு​டன் பழக்​க​மாகி சிறு, சிறு குற்​றச்​சம்​பவங்​களில் ஈடு​பட்டு வந்​தார்.

2011-ம் ஆண்டு பீளமேட்​டில் உள்ள இரண்​டாம் ரக கார் விற்​பனையகத்​தில், பூட்டை உடைத்து காரை திருடிச் சென்ற வழக்​கு, 2016-ல் சரவணம்​பட்​டி​யில் கல்​லூரி மாணவரைத் தாக்​கி, மிரட்​டிய வழக்​கு, 2021-ம் ஆண்டு கார் விற்​பனை தொடர்​பான தொழில் போட்​டி​யில் போத்​தனூரில் ஒரு​வரைக் கொலை செய்த வழக்கு உள்​ளிட்டபல வழக்​கு​கள் இவர் மீது உள்​ளன.

இந்​நிலை​யில், பணத்​துக்​காககாங்​கிரஸ் பிர​முகரை சமீபத்​தில் கடத்​தி​யுள்​ளார். ஒவ்​வொரு முறை​யும் போலீ​ஸார் நெருங்​கும்​போது, சாதுர்​ய​மாகத் தப்​பித்து விடு​கிறார். இந்த வழக்​கில் கார்த்​தி​யை​யும், மற்​றவர்​களை​யும் தீவிர​மாகத் தேடி வரு​கிறோம். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்​.

காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் வழக்கில் ‘போலீஸ்’ கார்த்தியை தேடும் போலீஸார்
சீனாவில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 28 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in