ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறைபிடித்த சம்பவம்: 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு

ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறைபிடித்த சம்பவம்: 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு
Updated on
1 min read

சென்னை: சென்னை சவுக்​கார்​பேட்டை மின்ட் தெரு​வில் 200-க்​கும் மேற்​பட்ட சில்​வர் பாத்​திரத் தயாரிப்பு மற்​றும் மொத்த விற்​பனைக் கடைகள் இயங்கி வரு​கின்​றன.

இங்கு சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அதி​காரி​கள் அவ்​வப்​போது ஆய்​வு​கள் மேற்​கொள்​வது வழக்​கம். நேற்று முன்​தினம் மாலை, ஜிஎஸ்டி கண்​காணிப்​பாளர் நிஷாந்த் தலை​மையி​லான ஆய்​வாளர்​கள் அஜீஸ் மற்​றும் சுஷில் ஆகியோர் மின்ட் தெரு​வில் உள்ள மகி​பால் ஸ்டெ​யின்​லெஸ் என்ற கடை​யில் திடீர் ஆய்வு மேற்​கொண்​டனர்.

தகவலறிந்த ஸ்டீல் மார்க்​கெட் சங்​கத்​தைச் சேர்ந்த சுமார் 300 வியா​பாரி​கள் மற்​றும் கடை உரிமை​யாளர்​கள் உடனடி​யாக அங்கு திரண்டு அதி​காரி​களை முற்​றுகை​யிட்​டனர். இந்த ஆய்வு நடவடிக்கை முற்​றி​லும் சட்​ட​விரோத​மானது என்​றும், ஜிஎஸ்டி உயர​தி​காரி​கள் நேரில் வந்து இதற்​கான விளக்​கத்தை அளிக்​கும் வரை, அதி​காரி​களை வெளி​யில் அனுப்ப முடி​யாது என்று கூறி அவர்​களை சிறைப்​பிடித்​தனர்.

வியா​பாரி​களின் இந்த திடீர் எதிர்ப்​பால், அதி​காரி​கள் கடைக்​குள்​ளேயே முடங்​கும் சூழல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அதி​காரி​கள் சென்னை யானைக்​க​வுனி காவல் நிலை​யத்​துக்​குத் தகவல் தெரி​வித்​தனர்.

சம்பவ இடத்​துக்கு வந்த பூக்​கடை துணை ஆணை​யர் தலை​மையி​லான யானைக்​க​வுனி போலீ​ஸார், வியா​பாரி​கள், சங்க நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அதன்​பிறகு, அதி​காரி​களை மீட்டு போலீ​ஸார் பாது​காப்​பாக அனுப்பி வைத்​தனர்.

5 பிரிவு​களின் கீழ் வழக்​கு

இந்​நிலை​யில், தங்​களை பணி செய்ய விடா​மல் தடுத்​த​தாக ஜிஎஸ்டி கண்​காணிப்​பாளர் நிஷாந்த் அளித்த புகாரின் பேரில், யானைக்​க​வுனி போலீ​ஸார் 5 பிரிவு​களின் கீழ் 10-க்​கும் மேற்​பட்ட வியா​பாரி​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

தொடர்ந்​து, வியா​பாரி​கள் மற்​றும் கடை உரிமை​யாளர்​கள் 6 பேரைப் பிடித்து தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

ஜிஎஸ்டி அதி​காரி​களின் தொடர் ஆய்​வுக்​கும், சக வியா​பாரி​கள் மீது காவல்​துறை வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​து​வதற்​கும் எதிர்ப்பு தெரி​வித்​து, நேற்று சவுக்​கார்​பேட்டை மின்ட் தெருவை சுற்​றி​யுள்ள 1,000-க்​கும் மேற்​பட்ட சில்​வர் பாத்​திரக் கடைகள் முழு​மை​யாக அடைக்​கப்​பட்​டன. வியா​பாரி​களின் இந்த திடீர் கதவடைப்பு போராட்​டத்​தால் சவுக்​கார்​பேட்டை பகுதி பரபரப்​புடன் காணப்​பட்​டது.

ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறைபிடித்த சம்பவம்: 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு
தருமபுரி கோயில்களுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பு நிலத்தின் ஆக்கிரமிப்பை 12 வாரத்தில் அகற்ற கெடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in