போலீஸாரால் தேடப்பட்ட எல்என்எஸ் நிதி நிறுவன நிர்வாகி கைது: துபாயிலிருந்து வந்தபோது பிடிபட்டார்

வேத​நா​ராயணன்

வேத​நா​ராயணன்

Updated on
1 min read

சென்னை: ரூ.828 கோடி மோசடி வழக்​கில் போலீ​ஸா​ரால் தேடப்​பட்ட எல்​என்​எஸ் நிதி நிறுவன நிர்​வாகி சென்னை விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

வேலூரை தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கி வந்த எல்என்எஸ் இன்​டர்​நேஷ்னல் ஃபை​னான்​சி​யல் சர்​வீஸ் என்ற நிதி நிறு​வனம் 5,322 பேரிடம் சுமார் ரூ.828 கோடி மோசடி செய்​தது.

பணத்தை இழந்​தவர்​கள் கொடுத்த புகாரின் அடிப்​படை​யில், தமிழக பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கடந்த 2022-ம் ஆண்டு அந்த நிறு​வனத்​தின் மீது வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதையடுத்து அந்​நிறு​வனம் தொடர்​புடைய 35 இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், ரூ.1.16 கோடி ரொக்​கம், 90 பவுன் நகை, ரூ.40 லட்​சம் வெள்​ளிப் பொருட்கள், ரூ.6 கோடி மதிப்​புள்ள 26 கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இந்த வழக்​கில் 10 பேர் கைது செய்​யப்​பட்​டனர். நிறு​வனத்​தின் முக்​கிய நிர்​வாகி​களாக இருந்த ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த மோகன்​பாபு, லட்​சுமி நாராயணன், வேத​நா​ராயணன், ஜனார்த்​தனன் ஆகிய 4 பேரை தேடப்​படும் குற்​ற​வாளி​களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்​நிலை​யில் வேத​நா​ராயணன், துபா​யில் இருந்து சென்னை வந்தார். அவரது பாஸ்​போர்ட், விசாக்​களை ஆய்வு செய்த குடி​யுரிமைத்​துறை அதி​காரி​களுக்​கு, அவருக்கு எதி​ராக பொருளா​தார குற்​றப்​பிரி​வினரின் ரெட் கார்​னர் நோட்​டீஸ் இருப்​பது தெரிய​வந்​தது.

இதைத்​தொடர்ந்​து, வேத​நா​ராயணனை கைது செய்து பொருளா​தாரக் குற்​றப்​பிரிவு போலீஸாரிடம் ஒப்​படைத்தனர்.

<div class="paragraphs"><p>வேத​நா​ராயணன்</p></div>
வாக்குச்சாவடி, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் இன்று எஸ்ஐஆர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in