சென்னை விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: ​விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி மதிப்​புள்ள 1.6 கிலோ தங்​கக் கட்​டிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. துபா​யில் இருந்து தங்​கக் கட்​டிகளை கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

துபா​யில் இருந்து விமானம் ஒன்று நேற்று முன்​தினம் இரவு சென்னை வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, சுற்​றுலா விசா​வில் துபாய் சென்​று​விட்டு வந்த வடமாநில இளைஞர் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவரை தனி அறைக்கு அழைத்​துச் சென்று அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

அப்​போது, அவர் உள்​ளாடைகளுக்​குள் ரூ.1.80 கோடி மதிப்​புள்ள 1.6 கிலோ தங்​கக் கட்​டிகளை மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது. அவற்றை பறி​முதல் செய்த அதி​காரி​கள், இளைஞரை கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது
ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரின் நிலத்தை ஐ.டி. ஊழியரிடம் விற்று ரூ.57 லட்சம் மோசடி: தரகர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in