நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர், இயற்பியல் ஆசிரியர் என மேலும் 2 பேர் கைது

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர், இயற்பியல் ஆசிரியர் என மேலும் 2 பேர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் யுஜி வினாத்​தாள் கசிவு வழக்​கில் மருத்​து​வர் மற்றும் இயற்​பியல் ஆசிரியர் என மேலும் 2 பேர் கைது செய்யப்பட்​டுள்​ளனர்.

நீட் யுஜி வினாத்​தாள் கசிந்​த​தாக எழுந்த புகாரை அடுத்​து, 23 லட்சம் மாணவர்​கள் எழு​திய அந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்​தது. இதற்​கான மறு​தேர்வு வரும் ஜூன் 21-ல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கில் பணம் கைமாறிய இந்த வினாத்​ தாள் மோசடி குறித்து சிபிஐ தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர மாநிலம் லத்​தூரைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் ஷிரூரே, புனே​யில் உள்ள பயிற்சி மையத்​தின் இயற்​பியல் ஆசிரியர் தேஜஸ் ஹர்​ஷத் குமார் ஷா ஆகிய 2 பேரை கைது செய்​துள்​ள​தாக சிபிஐ அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.

வினாத்​தாள் தயாரிப்​பாளரிட​மிருந்து வேதி​யியல் கேள்வி​களைப் பெற்று மாணவர்​களுக்​குக் கொடுத்​த​தாக ஷிரூரே மீதும், மற்றொரு குற்​ற​வாளி​யிட​மிருந்து கசிந்த இயற்​பியல் கேள்விகளைப் பெற்​ற​தாக ஷா மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இவர்​களை​யும் சேர்த்து இந்த வழக்​கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்​ணிக்கை 13 ஆக உயர்ந்​துள்​ளது. இந்த மோசடி வலை​யமைப்பை முழு​மை​யாகக் கண்​டறிய சிபிஐ இது​வரை 49 இடங்​களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்​தக்​கது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர், இயற்பியல் ஆசிரியர் என மேலும் 2 பேர் கைது
பக்ரீத்தை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in