பழிக்குப் பழியாக நடந்த கொலை: சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் கூட்டாளிகள் 7 பேர் கைது

பழிக்குப் பழியாக நடந்த கொலை: சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் கூட்டாளிகள் 7 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: ​கொலைக்கு பழிக்​குப் பழி​யாக நடந்த மற்​றொரு கொலை வழக்​கில் துப்​பாக்​கி​யால் சுட்டு பிடிக்​கப்​பட்ட ரவுடி​யின் கூட்​டாளி​கள் 7 பேர் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை துரைப்​பாக்​கம் கண்​ணகி நகரைச் சேர்ந்​தவர் ரவுடி சத்யா (27).

இவர், கடந்த 10-ம் தேதி இரவு எண்​ணூரில் இருந்து கண்​ணகி நகருக்கு ஆட்​டோ​வில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது 8 பேர் கொண்ட கும்​பல் அவரை வழிமறித்து கொலை செய்​து​விட்டு தப்​பியது.

இதுகுறித்து திரு​வொற்​றியூர் போலீ​ஸார் வழக்கு பதிந்து தனிப்​படை அமைத்து விசா​ரித்​தனர். கொலை​யில் தொடர்​புடைய புதுச்​சேரியை சேர்ந்த விக்கி (27), எண்​ணூரில் பதுங்கி இருந்​தது தெரிய​வந்​தது. அவரை பிடிக்க முயன்​ற​போது போலீ​ஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்​றார்.

இதையடுத்​து, போலீ​ஸார் விக்​கி​யின் காலில் சுட்​டுப் பிடித்து கைது செய்​தனர். இதைத் தொடர்ந்து சத்யா கொலை வழக்​கில் தொடர்​புடைய எண்​ணூரை சேர்ந்த அசோக்​பிர​சாத் (21), சூர்யா (19), செல்வா என்ற செல்​வ​ராஜ் (20), குறளரசன் (21), சுபாஷ் (25), வடிவேல் (23), வினோத் என்ற மூணு வினோத் (24) ஆகிய 7 பேரை கைது செய்​தனர்.

2023-ம் ஆண்​டு, எண்​ணூர் சுனாமி குடி​யிருப்​பில் நடந்த கோயில் திரு​விழா​வின்​போது, சத்யா அவரது நண்​பர்​களு​டன் சேர்ந்​து, பொய் விஜய் என்​பவரை கொலை செய்​துள்​ளார்.

இது தொடர்​பாக எண்​ணூர் காவல் நிலை​யத்​தில் வழக்​குப்​ப​திவு செய்​து, நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் பிணை​யில் சத்யா வெளியே வந்​த​போது, பொய் விஜ​யின் நண்​பர்​களான விக்கி உள்​ளிட்​டோர் அவரை கொலை செய்​தது வி​சா​ரணை​யில்​ தெரிய​வந்​தது.

பழிக்குப் பழியாக நடந்த கொலை: சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் கூட்டாளிகள் 7 பேர் கைது
தமிழகத்தில் 27 பிடிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in