சென்னை | தொழிலதிபர் மனைவியை மிரட்டி தங்க, வைர நகைகளை பறித்த வழக்கில் தாய், மகன் கைது

சென்னை | தொழிலதிபர் மனைவியை மிரட்டி தங்க, வைர நகைகளை பறித்த வழக்கில் தாய், மகன் கைது
Updated on
1 min read

சென்னை: அந்​தரங்க வீடியோவை வெளி​யிட்​டு​விடு​வ​தாக தொழில் அதிபர் மனைவியை மிரட்டி கோடிக்​கணக்​கான ரூபாய் மதிப்​புள்ள தங்க, வைர நகைகளை பறித்த வழக்​கில் தாய், மகன் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை வேப்​பேரி​யில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு ஒன்​றில் 35 வயதுடைய பெண் ஒரு​வர் தனது தொழில் அதிபர் கணவர் மற்​றும் பிள்​ளை​களு​டன் வசித்து வரு​கிறார். இதே குடி​யிருப்​பில் கடந்த ஆண்டு சங்​கீதா (53) என்​பவர் தனது மகன்​கள் திலீப் (34), அங்​கீத் (31) ஆகியோ​ருடன் வாடகைக்கு குடியேறி​னார்.

பின்​னர் தொழிலதிபர் மனைவி தனி​யாக இருக்​கும்​போது அவரது வீட்​டுக்கு சங்​கீதா அடிக்​கடி சென்று பேசிப் பழகி​னார். இரு​வரும் நண்​பர்​களான நிலை​யில், தொழில​திபரின் மனைவியும் அடிக்​கடி சங்​கீதா வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது திலீப்​புடன் பழக்​கம் ஏற்​பட்​டு, நெருக்​க​மாகி​யுள்​ளது.

இரு​வரும் தகாத உறவில் இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இதைப் பயன்​படுத்தி தொழிலுக்கு வரு​மான வரி செலுத்த வேண்​டும், செல​வுக்கு பணம் தேவை என பல்​வேறு காரணங்​களைக் கூறி​யுள்​ளார்.

இதை உண்​மையென நம்பி தொழில் அதிபர் மனைவி வீட்​டிலிருந்​து, கோடிக்​கணக்​கான ரூபாய் மதிப்​புள்ள சுமார் 850 கிராம் தங்க நகைகள், 120 கிராம் வைர நகைகள் மற்​றும் இரண்​டரை கிலோ வெள்​ளிப் பொருட்​களை சிறிது சிறி​தாக கொடுத்​துள்​ளார்.

மேலும் திலீப் பணம் கேட்​ட​போது, ‘அப்​பெண் மொத்த நகைகளை​யும் கொடுத்து விட்​டேன். தன்​னிடம் இல்​லை’ என கூறி​யுள்​ளார். அப்​போது திலீப், ‘பணம் தரவில்லை என்​றால் நாம் இரு​வரும் சேர்ந்து எடுத்த புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​களை இணை​யதளத்​தில் வெளி​யிட்டு விடு​வேன்’ என மிரட்​டி​யுள்​ளார்.

அதிர்ச்​சி​யடைந்த பெண் இந்த விவ​காரம் தொடர்​பாக வேப்​பேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதையறிந்த திலீப் தலைமறை​வா​னார். இந்த மோசடிக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக திலீப்​பின் தாய் சங்​கீ​தா, சகோ​தரர் அங்​கீத் ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இவர்​கள் இதே பாணி​யில் பல்​வேறு இடங்​களில் நகை, பணத்தை பறித்​தது தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் கூறினர். தலைமறை​வாக உள்ள திலீப்பை தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

சென்னை | தொழிலதிபர் மனைவியை மிரட்டி தங்க, வைர நகைகளை பறித்த வழக்கில் தாய், மகன் கைது
சென்னை | தொழில் வரி செலுத்துவதாக ரூ.5 லட்சம் மோசடி: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in