ஊரப்பாக்கம் அருகே அரசுப் பேருந்தை முந்தியபோது விபரீதம்: பள்ளிப் பேருந்து மோதி தாய், மகள் உயிரிழப்பு

உயிரிழந்த தாய் தேவி, மகள் சுவாதி.

உயிரிழந்த தாய் தேவி, மகள் சுவாதி.

Updated on
1 min read

ஊரப்பாக்கம்: அரசுப் பேருந்தை முந்​திச் செல்ல முயன்ற ஸ்கூட்​டர் மீது எதிரே வந்த தனி​யார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்​தில், தாய், மகள் உயி​ரிழந்​தனர்.

ஊரப்​பாக்​கம் அடுத்த கீரப்​பாக்​கம் நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பைச் சேர்ந்​தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி(23). இரு​வரும் நேற்று காலை 8 மணி​யள​வில் ஸ்கூட்​டரில் வீட்​டிலிருந்து ஊரப்​பாக்​கம் நோக்கி புறப்​பட்​டனர்.

சுவாதி ஸ்கூட்​டரை ஓட்டினார். காரணை புதுச்​சேரி கிராமம் அருகே சென்​ற​போது, முன்​னால் சென்ற அரசுப் பேருந்தை சுவாதி முந்​திச் செல்ல முயன்​ற​தாக கூறப்​படு​கிறது. அப்​போது எதிரே வந்த தனி​யார் மெட்​ரிக் பள்ளிப் பேருந்​து, ஸ்கூட்​டர் மீது வேக​மாக மோதி​யது.

இதில் ஸ்கூட்​டரில் இருந்து தூக்கி வீசப்​பட்ட தேவி, தலை​யில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். படு​காயமடைந்த சுவா​தியை அக்​கம்​பக்​கத்​தினர் மீட்​டு, ஆம்​புலன்ஸ் மூலம் பொத்​தேரி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர்.

அங்கு அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். விபத்து நடந்​த​போது பள்​ளிப் பேருந்​தில் மாணவர்​கள் யாரும் இல்​லை. ஓட்​டுநர், நடத்​துநர் மட்​டுமே இருந்​தனர்.

தகவலறிந்த கூடு​வாஞ்​சேரி தாம்​பரம் போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார், இரு​வரின் உடல்​களை​யும் மீட்டு தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு பிரேதப் பரிசோதனைக்​காக அனுப்​பினர். வழக்​குப் பதிவு செய்து பள்​ளிப் பேருந்து ஓட்​டுநரை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>உயிரிழந்த தாய் தேவி, மகள் சுவாதி.</p></div>
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாரக் கடைசி நாட்களை முன்னிட்டு 4,260 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in