கூடுவாஞ்சேரி | மூதாட்டியை கொலை செய்து ஏரியில் வீசியவர் கைது

கூடுவாஞ்சேரி | மூதாட்டியை கொலை செய்து ஏரியில் வீசியவர் கைது
Updated on
1 min read

கூடுவாஞ்சேரி: சிங்​கப்​பெரு​மாள் கோவில் சின்ன செங்​குன்​றம், வண்​டிக்​காரன் தெருவை சேர்ந்​த திலீபன் (35), தனி​யார் நிறுவன ஊழியர். இவர் கூடு​வாஞ்​சேரி நந்​தீஸ்​வரர் குடி​யிருப்​பில் வசிக்​கும் தன் பெரி​யம்மா சரஸ்​வ​தியை (65) காண​வில்லை என கடந்த ஏப். 29-ம் தேதி கூடு​வாஞ்​சேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

போலீ​ஸார் அந்த பகு​தி​யில் உள்ள சிசிடிவி பதிவு​களை ஆய்வு செய்​தனர். இதில், சரஸ்​வ​தி​யின் வீட்​டுக்கு அருகே வசிக்​கும் வினோத்​கு​மார் (35), கொடைக்​கானலில் வசிக்​கும் தன் நண்​பர் தீபன் சக்​கர​வர்த்தியுடன் சேர்ந்து சரஸ்​வ​தியை கொலை செய்து பின்​னர் தலைமறை​வாகி இருப்​பது தெரிந்​தது.

இதையடுத்து கொலை​யாளி​களின் மொபைல் போன் சிக்​னலை வைத்து கொடைக்​கானல் விரைந்த போலீ​ஸார் அங்கு தீபன் சக்​கர​வர்த்​தியை கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், வினோத்​கு​மாருடன் சேர்ந்து சரஸ்​வ​தி​யின் மூக்​கு, வாயை பொத்தி கொன்று அவர் அணிந்​திருந்த 7 பவுன் நகையை கொள்​ளை​யடித்​ததை தீபன் போலீ​ஸாரிடம் தெரி​வித்​தார்.

மேலும், சரஸ்​வ​தி​யின் உடலை காரில் எடுத்து சென்று திரு​வள்​ளூர், வெள்​ளவேடு, தாத்​ரீஸ்​வரர் கோயில் அருகே உள்ள ஏரியில் வீசி​ய​தாக​வும் தெரி​வித்​தார். இதையடுத்து சரஸ்​வ​தி​யின் உடலை மீட்ட போலீ​ஸார் பிரேத பரிசோதனைக்​காக செங்​கை மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

பின்​னர் தீபன் மீது வழக்கு பதிவு செய்த போலீ​ஸார் அவரை செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். தலைமறை​வாக உள்ள வினோத்​கு​மாரை, போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

கூடுவாஞ்சேரி | மூதாட்டியை கொலை செய்து ஏரியில் வீசியவர் கைது
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in