போலி ஆவணம், ஆள்மாறாட்டம் மூலம் ரூ.16 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்தவர் கைது

போலி ஆவணம், ஆள்மாறாட்டம் மூலம் ரூ.16 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்தவர் கைது
Updated on
1 min read

சென்னை: ராயப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் சிவகணேசன் (38). இவர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் அண்​மை​யில் புகார் ஒன்றை அளித்​தார். அதில், “தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பங்​கு​தா​ர​ராக உள்​ளேன்.

இந்த நிறு​வனம் சார்​பில் நீலாங்கரை கபாலீஸ்​வரர் நகரில் 60 ஏக்​கரில் மனைப்​பிரிவு (லே-அவுட்) போடப்​பட்​டுள்​ளது. அந்த மனைப்​பிரி​வின் முன் பகு​தி​யில் உள்ள 1,050 ச.மீ. இடத்தை அரசு சாலை விரி​வாக்​கத்​துக்கு நெடுஞ்​சாலைத் துறை கையகப்​படுத்​தி​யது.

அதற்கு ஈடாக அரசு வழங்கிய இழப்​பீடு தொகை ரூ.16 கோடியை, மோசடி நபர் ஒரு​வர் போலி ஆவணம் மூலம் பெற்​று​விட்​டார். முன்​ன​தாக அந்த நபர் எங்​களது நிலத்​தை, போலி ஆவணம் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​து​விட்​டார்.

இதை அடிப்​படை​யாக வைத்தே ரூ.16 கோடியை பெற்​றுள்​ளார். எனவே அவரை கண்​டறிந்து கைது செய்ய வேண்​டும்” என தெரி​வித்​திருந்​தார்.

இதுகுறித்​து, போலீ​ஸார் மேற்​கொண்​ட விசா​ரணையில் சென்னை ஆழ்​வார் திருநகரைச் சேர்ந்த சி.ஆர்​.நட​ராஜன் (55) என்​பவர் மோசடி​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர், இவர் எலெக்ட்​ரிக் கடை நடத்தி வருவது குறிப்​பிடத்​தக்​கது.

போலி ஆவணம், ஆள்மாறாட்டம் மூலம் ரூ.16 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்தவர் கைது
தேசிய கல்விக்கொள்கை பரிந்துரையின்படி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்கும் திட்டம்: யுஜிசி உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in