மயிலை சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்

சரணடைந்த அழகு ராஜா (உள்படம்) மயிலை சிவக்குமார்

சரணடைந்த அழகு ராஜா (உள்படம்) மயிலை சிவக்குமார்

Updated on
1 min read

சென்னை: மயி​லாப்​பூரில் முக்​கிய ரவுடி​யாக வலம் வந்தவர் சிவக்​கு​மார். இவர் மீது 35 குற்ற வழக்​கு​கள் இருந்தன. கரோனா கால கட்​டத்​தில் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்​தார்.

பின்​னர் கடந்த 2021-ம் ஆண்டு அசோக் நகரில் மர்ம கும்​பலால் கொலை செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக அசோக் நகர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், சிவக்​கு​மாரை கொலை செய்​தாகக் கூறி 5 பேர் கள்​ளக்​குறிச்சி நீதி​மன்​றத்​தில் சரணடைந்​தனர். அசோக் நகர் போலீ​ஸார் அந்த 5 பேரை​யும் அழைத்து வந்து புழல் சிறை​யில் அடைத்​தனர்.

போலீ​ஸாரின் தொடர் விசா​ரணை​யில் 1997-ம் ஆண்டு படு​கொலை செய்​யப்​பட்ட ரவுடி தோட்​டம் சேகரின் கொலைக்கு பழி​வாங்க தோட்​டம் சேகரின் மகனான, அழகு​ராஜா திட்​டம் தீட்டி 24 ஆண்​டு​களுக்கு பின் மயிலை சிவக்​கு​மாரை கொலை செய்​தது தெரிய​வந்​தது.

இந்த வழக்கு மட்​டுமல்​லாமல் பல குற்ற வழக்​கு​களி​லும் அழகு ராஜா சம்​பந்​தப்​பட்​டிருந்​தார். கடந்த ஜனவரி மாதம் திரு​வள்​ளூர் மாவட்​டம் திருப்​பாச்​சூர் அருகே தனிப்​படை போலீ​ஸார் அழகு​ராஜாவை பிடிக்க முயன்ற நிலை​யில், அவர் காரை நிறுத்​தாமல் வேக​மாகச் சென்று தப்​பி​னார்.

அசோக் நகர் போலீ​ஸார் அழகு ராஜாவை தனிப்​படை அமைத்து தொடர்ந்து தேடி வந்​தனர். இந்​நிலை​யில் அவர் சென்னை 3-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நேற்று சரணடைந்​தார். அவரை 15 நாள் நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைக்​கும்​படி நீதிபதி உத்​தர​விட்​டார். அதன்​படி அவர்​ புழல்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

<div class="paragraphs"><p>சரணடைந்த அழகு ராஜா (உள்படம்) மயிலை சிவக்குமார்</p></div>
மாலத்தீவு கேரம் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் ஊக்கத்தொகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in