மாலத்தீவு கேரம் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் ஊக்கத்தொகை

மாலத்தீவு கேரம் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் ஊக்கத்தொகை
Updated on
1 min read

சென்னை: மாலத்​தீ​வில் கடந்த டிச.2 முதல் 6-ம் தேதி வரை 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடை​பெற்​றது. இப்​போட்​டி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த கீர்த்​த​னா, காசி​மா, மித்ரா ஆகியோர் பதக்​கங்​களை வென்​றனர்.

இதில் கீர்த்​த​னா​வுக்கு ரூ.1 கோடி​யும், காசி​மாவுக்கு ரூ.50 லட்​ச​மும், மித்​ரா​வுக்கு ரூ.40 லட்​ச​மும் என ரூ.1.90 கோடி வழங்​கப்​படு​வ​தாக தமிழக அரசு அறி​வித்​தது.

இதைத் தொடர்ந்​து, கீர்த்​த​னா, காசிமா ஆகியோ​ருக்கு உயரிய ஊக்​கத் தொகைக்​கான காசோலைகளை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்கி வாழ்த்​தி​னார்.

மேலும், சென்​னை​யில் நடை​பெற்ற தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் (SDAT) ஸ்கு​வாஷ் உலகக் கோப்பை போட்​டி​யில் வெற்றி பெற்ற இந்​திய அணி​யைச் சேர்ந்த ஜோஷ்னா சின்​னப்​பா, அபே சிங், அனஹத் சிங், வேல​வன் செந்​தில்​கு​மார், ஸ்கு​வாஷ் சாம்​பியன்​ஷிப் இயக்​குநர் சைரஸ் போன்சா மற்​றும் பயிற்​றுநர்​கள் ஹரிந்​தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வரை சந்​தித்து வாழ்த்து பெற்​றனர்.

நிகழ்​வில், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்​டி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

மாலத்தீவு கேரம் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் ஊக்கத்தொகை
நியாயவிலை கடை தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in