ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு: தூத்துக்குடியைச் சேர்ந்த கொள்ளையன் கைது

ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு: தூத்துக்குடியைச் சேர்ந்த கொள்ளையன் கைது
Updated on
1 min read

சென்னை: அரும்​பாக்​கத்​தில் ரயில்வே அதி​காரி வீட்​டில் நகை, பணம் திருடப்​பட்ட வழக்​கில், தூத்​துக்​குடியைச் சேர்ந்தவர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை அரும்பாக்கம், ஜெகந்​நாத நகரைச் சேர்ந்​தவர் நந்​தகு​மார்.

தெற்கு ரயில்வே அதி​காரி. இவர் கடந்த அக்​டோபர் மாதம் 10-ம் தேதி இரவு மனைவி விமலா, மகன் ஹித்​தேஷ் உடன் தூங்​கி​னார். மறு​நாள் அதி​காலை விமலா கண்​விழித்து எழுந்து கதவை திறக்க முயன்​ற​போது, அது வெளிப்​புற​மாக பூட்​டப்​பட்​டிருந்​ததைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​தார்.

உடனடி​யாக, அவர் போன் மூலம் அக்​கம்​பக்​கத்​தினரை அழைத்​தார். அவர்​கள் வந்து கதவை உடைத்து திறந்​து​விட்​டனர். பின்​னர் வெளியே வந்து பார்த்​த​போது, மற்​றொரு அறை​யில் வைக்​கப்​பட்​டிருந்த செல்​போன், 3 பவுன் நகை, ரூ80,000 ரொக்​கம், வெள்ளி கைச்​செ​யின், கொலுசு ஆகிய​வற்றை மர்ம நபர் திருடிச் சென்​றது தெரிய​வந்​தது.

இதுகுறித்து கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் நந்​தகு​மார் வீடு புகுந்து திருட்​டில் ஈடு​பட்​டது தூத்​துக்​குடி மாவட்​டம் உடன்​குடியை சேர்ந்த முத்​துக்​கிருஷ்ணன் (37) என்​பது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். முத்​துக்​கிருஷ்ணன் ஒரு வீட்​டுக்​குள் புகுந்​தவுடன் படுக்​கையறை கதவை வெளிபக்​க​மாக பூட்​டி​விட்டு திருடு​வதை வழக்​க​மாகக் கொண்​ட​வர்.

அவர் மீது ஏற்​கெனவே திரு​முல்​லை​வாயல், பெர​வள்​ளூர், திருப்​பூர், கோயம்​புத்​தூர் ஆகிய பகு​தி​களில் பல்​வேறு திருட்டு வழக்​கு​கள்​ உள்​ளன என போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு: தூத்துக்குடியைச் சேர்ந்த கொள்ளையன் கைது
பெண் விஏஓ உயிரிழப்பு வழக்கில் திருப்பம்: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in