பாயாசத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு

பாயாசத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு
Updated on
1 min read

சென்னை: ​அயனாவரத்​தில் மமலாபி (75) என்ற மூதாட்டி தனி​யாக வசிக்​கிறார். இவரது பிள்​ளை​கள் திரு​மண​மாகி வெளியூர்​களில் உள்​ளனர். இவர் மேல் தளத்​தில் வசிக்​கும் நிலை​யில் வீட்​டின் கீழ் தளத்தை பத்​ருன்​னிஷா பேகம் (50) என்​பவருக்கு வாடகைக்கு விட்​டுள்​ளார்.

கடந்த 15-ம் தேதி, மூதாட்டி மமலாபி வீட்​டுக்கு பத்​ருன்​னிஷா பேகத்​தின் 14 வயது மகள் வந்​தார். அவர் பாட்டி உங்​களுக்கு பாயாசம் செய்து தரவா? எனக் கேட்​டுள்​ளார்.

நீ ஆசை​யாக கேட்​ப​தால் கொஞ்​ச​மாக செய்து கொடு என மூதாட்டி தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து மமலாபி வீட்​டிலேயே சிறுமி பாயாசம் செய்து அவருக்கு கொடுத்​துள்​ளார்.

பாயாசம் பரு​கிய சிறிது நேரத்​தில் மமலாபி மயங்​கி​னார். பின்​னர் மறு​நாள் காலை எழுந்து பார்த்​த​போது, மூதாட்டி கழுத்​தில் அணிந்​திருந்த 5 பவுன் எடைகொண்ட 2 செயின்​கள் திருடு​போனது தெரிய​வந்​தது.

இது தொடர்​பாக அவர் அயனாவரம் போலீஸில் புகார் அளித்​தார். போலீ​ஸ் விசாரணையில் பத்​ருன்​னிஷா பேகத்​தின் வழி​காட்​டு​தல்​படி அவரது 14 வயது மகள் பாயாசம் செய்து அதில் தூக்க மாத்​திரை கலந்து கொடுத்​து, நகை மற்​றும் ரூ.1.50 லட்​சத்தை திருடியது தெரிய​வந்​தது.

இதையடுத்து பத்​ருன்​னிஷா பேகம், அவரது மகளை போலீ​ஸார் கைது செய்​தனர். பத்​ருன்​னிஷா பேகம் சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், அவரது மகள் சிறார் நீதிக் குழு​மத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, அரசு கூர்​நோக்​கு இல்​லத்​தில்​ சேர்க்​கப்​பட்​டார்​.

பாயாசத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு
156 கிலோ எடை கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகர சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in