ஷாருக்

ஷாருக்

சைபர் மோசடி கும்பலுக்கு உதவிய ஐ.டி ஊழியர் கைது: ரூ.9.80 லட்சம் பணம் மோசடி

Published on

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகத்​தில் பணம் முதலீடு செய்​தால் அதிக லாபம் தரு​வ​தாகக் கூறி ரூ.9.80 லட்​சம் மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் பெங்​களூரு ஐ.டி. ஊழியரை சென்னை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை முகப்​பேர் மேற்கு பகு​தி​யைச் சேர்த்​தவர் சீனி​வாசன்​(38). தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் அதி​காரி​யாக உள்ள இவர், கடந்த செப்​.5-ம் தேதி சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார்.

அதில், “கடந்த 2024 ஜூன் 14-ம் தேதி முகநூல் பக்​கத்​தில் வந்த விளம்​பரத்தை நம்பி அவர்​கள் தெரி​வித்​த​படி, பங்​குச் சந்தை பங்​கு​களில் முதலீடு செய்ய ஒப்​புக் கொண்​டேன். தொடர்ந்து அவர்​கள் அனுப்​பிய லிங்க்​கில் பணம் அனுப்​பினேன்.

இப்​படி, பல்​வேறு தவணை​களாக ரூ.9.80 லட்​சம் அனுப்​பினேன். ஆனால், எந்த லாப​மும் கிடைக்​க​வில்​லை. மேலும், எனது பணமும் திரும்​பக் கிடைக்​க​வில்​லை. எனவே, அந்த மோசடி கும்​பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார்.

இதுகுறித்து சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரிக்க காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரித்​தனர்.

இதில், சைபர் க்ரைம் மோசடி கும்​பலுடன் தொடர்​பில் இருந்​ததோடு, மோசடி பணம் தனது வங்கி கணக்​குக்கு வர உதவிய பெங்​களூரு​வைச் சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் ஷாருக்​(30) என்​பவரை அங்கு சென்று சென்னை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இவர், பணப் பரிவர்த்​தனை​களுக்கு ஏற்​ற​வாறு சைபர் மோசடி கும்​பலிடம் ரூ.2 லட்​சத்​துக்கு மேல் கமிஷன் பெற்​றுள்​ளார் என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்​.

<div class="paragraphs"><p>ஷாருக்</p></div>
நடிகை மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in