ஆக்ரா ரயிலில் சூட்கேசில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்: கூடுவாஞ்சேரியில் ஒடிசா தம்பதியிடம் போலீஸார் விசாரணை

ஆக்ரா ரயிலில் சூட்கேசில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்: கூடுவாஞ்சேரியில் ஒடிசா தம்பதியிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

செங்கல்பட்டு: ஆக்ரா ரயி​லில் சூட்​கேசில் உடல் பாகங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டது தொடர்​பாக போலீ​ஸார் மேற்​கொண்ட விசா​ரணை​யில் கூடு​வாஞ்​சேரி அருகே கொலை நிகழ்ந்​திருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழ்​நாடு எக்​ஸ்​பிரஸ் ரயில் கடந்த 5-ம் தேதி ஆக்​ரா​வுக்கு சென்​ற​போது, ரயி​லில் இருந்த சிவப்பு நிற சூட்​கேஸில் சிதைந்த நிலை​யில் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது.

இது தொடர்​பாக உத்​தரப்​பிரதேச ரயில்வே மற்​றும் காவல் துறை, தமிழ்​நாடு ரயில்வே காவல் துறை​யின் உதவியை நாடியது. இதன்​பேரில் நடை​பெற்ற விசா​ரணை​யில், ரயி​லில் ஏறு​வதற்கு முன்​பு, ஓர் ஆணும் ஒரு பெண்​ணும் சிவப்பு நிற சூட்​கேசுடன் சென்னை சென்ட்​ரலுக்​குள் நுழைவதை சிசிடிவி காட்சி மூலம் கண்​டறிந்​தனர்.

அவர்​கள் சூட்​கேஸை ஒரு பெட்​டிக்​குள் வைத்​து​விட்​டு, ரயில் புறப்​படு​வதற்கு முன்பே அதிலிருந்து இறங்​கி, புறநகர் ரயி​லில் ஏறி கூடு​வாஞ்​சேரி​யில் இறங்​கியது தெரிந்​தது.

கூடு​வாஞ்​சேரி சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் 200-க்​கும் மேற்​பட்ட சிசிடிவி காட்​சிகளை போலீ​ஸார் ஆய்வு செய்​தனர். இதில் கூடு​வாஞ்​சேரி மசூதி தெரு​வில் உள்ள வீட்​டிலிருந்து அந்த தம்​பதி சூட்​கேசுடன் சென்​றது தெரிந்​தது.

வீட்​டின் பூட்டை உடைத்து போலீ​ஸார் உள்ளே சென்​றனர். அங்​கு, யாரையோ கொலை செய்து உடலை எலும்பு தனி​யாக, சதை தனி​யாக வெட்டி எடுத்த அடை​யாளம் இருந்​தது. மேலும் பெரிய பாத்​திரத்​தில் அசைவ உணவு சமைத்​திருப்​பதை கண்​டறிந்​தனர்.

சமைத்த உணவில் மனித உறுப்பு இருப்​ப​தாக சந்​தேகம் எழுந்​த​தால், அந்த பாத்​திரத்தை செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு ஆய்​வுக்​காக போலீ​ஸார் அனுப்​பி​யுள்​ளனர். சம்​பவம் நடந்த வீட்​டில் ஒடி​சாவைச் சேர்ந்த மணிக் உதின் லஷ்கர்​(40), மஞ்சி (35), ஹையத்​துன் நிஷா (38) வசித்​தது விசா​ரணை​யில் தெரிந்​தது.

கடந்த ஜூன் மாதம் வீட்டை வாடகைக்கு எடுத்து தம்​ப​தி​யர், கொலை செய்​யப்​பட்ட பெண் ஆகிய மூவரும் ஒன்​றாக தங்​கி​யுள்​ளனர். இறந்த பெண் ஹையத்​துன் நிஷா என்​பதை போலீ​ஸார் கண்​டறிந்​தனர்.

அவர் தாம்​பரம் அரு​கே​யுள்ள தனி​யார் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வந்​திருப்​பதும் தெரிந்​தது. இவருக்கு திரு​மண​மாகி 19 வயதில் மகன் இருப்​ப​தை​யும் அறிந்​தனர். அவரிடம் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

கொலை செய்​யப்​பட்​ட​வரின் தலை இன்​னும் கண்​டு​பிடிக்​கப்​ப​டாத​தால் போலீ​ஸார் தலை​யைத் தேடி வரு​கின்​றனர். ஒடிசாவைச் சேர்ந்த தம்பதிகள் மணிக் உதின் லஷ்கர், மஞ்சியை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக்ரா ரயிலில் சூட்கேசில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்: கூடுவாஞ்சேரியில் ஒடிசா தம்பதியிடம் போலீஸார் விசாரணை
சிங்கப்பூரில் அனைத்துலக தமிழ் நாடக திருவிழா: ஆக.28-ல் ‘காற்றினிலே வரும் கீதம்’ - சிறப்புக் காட்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in