பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவமனை வார்டு ஊழியர் கைது

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவமனை வார்டு ஊழியர் கைது
Updated on
1 min read

சென்னை: பெண்ணிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்ட ஸ்டான்லி மருத்​து​வ​மனை வார்டு ஊழியர் கைது செய்​யப்​பட்​டார். கொருக்​குப்​பேட்​டையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒரு​வருக்கு வலது கால் பாதத்​தில் அறுவை சிகிச்சை செய்து கட்​டுப் போடப்​பட்​டுள்​ளது.

மருத்​து​வ​மனை செல்​வ​தில் சிரமம் இருந்​த​தால், ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் வார்டு பாயாக (ஊழியர்) பணி செய்து வரும் கொடுங்​கையூரைச் சேர்ந்த சேகர் (58) என்​பவர் அப்பெண்ணின் வீட்​டுக்கு நேரில் சென்று அவருக்கு காலில் டிரஸ்​ஸிங் செய்து வந்​தார்.

வழக்​கம் போல், கடந்த 21-ம் தேதி மதி​யம் சேகர் அப்பெண்​ணின் காலில் டிரஸ்​ஸிங் செய்ய அவரது வீட்​டுக்​குச் சென்​ற ​போது, வீட்​டில் அப்பெண் மற்​றும் அவரது பேரன் மட்​டும் இருப்​பதை அறிந்​து, பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக அப்பெண் ஆர்​.கே.நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிந்து பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட சேகரை நேற்று முன்தினம் கைது செய்து சிறை​யில்​ அடைத்​தனர்​.

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவமனை வார்டு ஊழியர் கைது
சாலையை ஆக்கிரமித்து கட்டியதாக கூறி கோயிலை இடிக்க பிறப்பித்த உத்தரவு ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in